மேலும் அறிய

திருச்சி: காவிரி, கொள்ளிடத்தில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது - மக்கள் அவதி

திருச்சி மாவட்டத்தில் 2 ஆறுகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வேளாண் நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் அவதி.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தினால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக அணையிலிருந்து இரண்டு லட்சம் கன அடிக்கும் மேல் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இந்த வெள்ள நீர் மாயனூர் தடுப்பணையைத் தாண்டி முக்கொம்பு மேலணைக்கு ஆர்ப்பரித்து வருகிறது. பின்னர் இங்கிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ள நீர் பிரித்து திறந்து விடப்படுகிறது. இதனால் 2 ஆறுகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வேளாண் நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் அந்தநல்லூர் வட்டாரத்துக்கு உட்பட்ட கிளிக்கூடு, திருவளர்ச்சோலை மற்றும் உத்தமர்சீலி ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்ட 55 ஹெக்டேர் பரப்பளவிலான வாழை மரங்கள், வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பதாக தோட்டக்கலை துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் துறையூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் 6 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பருத்தி பயிர்கள் மூழ்கி கிடக்கின்றன.


திருச்சி: காவிரி, கொள்ளிடத்தில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது - மக்கள் அவதி

மேலும் இதுவரை அந்த வெள்ள நீர் வழியாத காரணத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கபட்ட  பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், "நான் சாகுபடி செய்த 3 ஏக்கர் வாழை மரங்களும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. காவிரியில் எப்போதெல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் எங்களது வேளாண் நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. இந்த ஆண்டில் மட்டும் 5-வது முறையாக வெள்ள பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த பாதிப்புக்கு இழப்பீடுடன் நின்றுவிடாமல் பிரச்சனைக்கு நீண்ட கால தீர்வை காண வேண்டும்" என்றார். லால்குடி கூகூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற விவசாயி கூறும்போது, "நான் 5 ஏக்கரில் வாழை மரங்களும் மூன்றரை ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடியும் செய்திருந்தேன். காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்ட போது கரைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி முடிந்த அளவுக்கு முயற்சி செய்து பார்த்தேன். இருந்தபோதிலும் எனது வேளாண் நிலங்களை வெள்ளநீர் சூழ்ந்து விட்டது" என கூறினார். மாவட்டம் முழுவதும் சுமார் 100 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட வாழை, நெல்,பருத்தி பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


திருச்சி: காவிரி, கொள்ளிடத்தில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது - மக்கள் அவதி

இதனை தொடர்ந்து  காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் திருப்பராய்த்துறை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அவர்கள் மேடான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதேபோன்று கரூர் மாவட்டம் நொய்யல் அருகாமையில் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியில் 50 வீடுகளை காவிரி நீர் சூழ்ந்து கொண்டதால் அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அங்குள்ள ஈவேரா பெரியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ளம் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர். கல்லணையில் இருந்து சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வரத்து இருந்ததால் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமத்தில் கொள்ளிடம் இடது கரையில் மண் சரிவு ஏற்பட்டு கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து நீர்வளத்துறை அதிகாரிகளால் உடனடியாக கண்டறியப்பட்டு அந்த இடத்தில் பெரிய பாறாங்கற்கள் கொண்டு மண் அரிமானம் ஏற்படாதவாறு சரி செய்யப்பட்டு வருகிறது. இதனால் சேதம் ஏற்படாதவாறு 50 கிராமங்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை செயற்பொறியாளர் தமிழ்செல்வன், உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் ஹரி ஆகியோர் உடனடியாக மேற்கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Embed widget