மேலும் அறிய

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் 75 வது சுதந்திர தினத்தை 75 நாட்கள் கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டு பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளின் மூலம் இந்தியாவின் சுதந்திரத்தை பறைசாற்றும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் சுதந்திரத்தை போற்றும் வகையில் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என பாரத பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு விதமான சுகந்திர தினவிழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினத்தை பறைசாற்றும் வகையில் விமான நிலையத்தின் உள் பகுதியான செக்கின் பகுதியில் பயணிகள் இந்திய கொடியுடன் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு புகைப்படம் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு விதவிதமான ரங்கோலிகள் வரைவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் முக்கிய பங்காக பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்றடுக்கு பாதுகாப்பானது நேற்று  முதல் நடைமுறைக்கு வந்தது.  இந்த நிலையில் விமான நிலையத்திற்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்ட பின்பு விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப் படுகிறது.


சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

மேலும் விமானத்தில் பயணம் செய்ய தேங்காய், எண்ணெய் வகைகள், மிளகாய் தூள், மிளகாய் உள்ளிட்ட ஏழு வகையான பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது தொடரும் எனவும் விமான நிலைய ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி விமான நிலைய வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மோப்பநாய் குழுவினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழாவை சீா்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் ரெயில், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஸ்கேனர் உதவியுடன் மீண்டும் பொருட்கள் சோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னரே பயணிகள் உடைமையுடன் விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சோதனை வருகிற 17-ந் தேதி வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 


சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை சுதந்திரதினத்தை  வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும்  மாவட்ட நிர்வாகம் மாநகரில் பல்வேறு இடங்களில் வண்ணங்களை பூசி, மக்களை கவரும் வகையிலும்,  மக்களுக்கு 75 ஆவது சுதந்திர தினத்தை நினைவூட்டும் வகையிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.  மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.  மேலும் இந்த 75வது சுதந்திர தின விழாவை பொதுமக்கள் அனைவரும் வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ADMK: பாஜக மாநாட்டால் அதிமுகவிற்கு ஆப்பு - கட்சி பேரே தெரியாத முன்னாள் அமைச்சர்கள்? வம்பில் ஈபிஎஸ்?
ADMK: பாஜக மாநாட்டால் அதிமுகவிற்கு ஆப்பு - கட்சி பேரே தெரியாத முன்னாள் அமைச்சர்கள்? வம்பில் ஈபிஎஸ்?
IND Vs ENG: 100 அடிச்சும் ஜெய்ஸ்வாலை வெளுக்கும் ரசிகர்கள் - சச்சினே கடுப்பாய்ட்டார், பட்டர் ஃபிங்கர்ஸ் ஆமாம்..
IND Vs ENG: 100 அடிச்சும் ஜெய்ஸ்வாலை வெளுக்கும் ரசிகர்கள் - சச்சினே கடுப்பாய்ட்டார், பட்டர் ஃபிங்கர்ஸ் ஆமாம்..
TamilNadu Roundup: திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் பட்டாக்கத்தியுடன் தவெகவினர் மோதல்-10 மணி செய்திகள்
திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் பட்டாக்கத்தியுடன் தவெகவினர் மோதல்-10 மணி செய்திகள்
விபூதி பூச வேண்டும், ருத்ராசம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் - அண்ணாமலை சொன்னது என்ன !
விபூதி பூச வேண்டும், ருத்ராசம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் - அண்ணாமலை சொன்னது என்ன !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சிங்காரச் சென்னை பில்டர்ஸ் அசோசியேஷன்! கட்டிட கட்டுமான  கண்காட்சி! 60 அரங்குகளுடன் அசத்தல்
ஓட்டுனருக்கு அடி, உதை அடாவடி செய்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி
”கர்பமா இருக்க என்ன அடிச்சான்” உறைய வைக்கும் ஆதாரம் அஸ்மிதா உருக்கம் |  Shri Vishnu | Ashmitha
பயம் காட்டும் பாஜக தொகுதி மாறும் ஜெயக்குமார் எடப்பாடிக்கு தூது | EPS | ADMK BJP Alliance

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பாஜக மாநாட்டால் அதிமுகவிற்கு ஆப்பு - கட்சி பேரே தெரியாத முன்னாள் அமைச்சர்கள்? வம்பில் ஈபிஎஸ்?
ADMK: பாஜக மாநாட்டால் அதிமுகவிற்கு ஆப்பு - கட்சி பேரே தெரியாத முன்னாள் அமைச்சர்கள்? வம்பில் ஈபிஎஸ்?
IND Vs ENG: 100 அடிச்சும் ஜெய்ஸ்வாலை வெளுக்கும் ரசிகர்கள் - சச்சினே கடுப்பாய்ட்டார், பட்டர் ஃபிங்கர்ஸ் ஆமாம்..
IND Vs ENG: 100 அடிச்சும் ஜெய்ஸ்வாலை வெளுக்கும் ரசிகர்கள் - சச்சினே கடுப்பாய்ட்டார், பட்டர் ஃபிங்கர்ஸ் ஆமாம்..
TamilNadu Roundup: திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் பட்டாக்கத்தியுடன் தவெகவினர் மோதல்-10 மணி செய்திகள்
திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் பட்டாக்கத்தியுடன் தவெகவினர் மோதல்-10 மணி செய்திகள்
விபூதி பூச வேண்டும், ருத்ராசம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் - அண்ணாமலை சொன்னது என்ன !
விபூதி பூச வேண்டும், ருத்ராசம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் - அண்ணாமலை சொன்னது என்ன !
Air India Flight Crash: ஏர் இந்தியா விபத்து; பைலட்டின் சீட்டில் தொழில்நுட்பக் கோளாறா.? மத்திய அரசு என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஏர் இந்தியா விபத்து; பைலட்டின் சீட்டில் தொழில்நுட்பக் கோளாறா.? மத்திய அரசு என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Netanyahu on War: அது நடந்துட்டா சண்டைய நிறுத்திடுவோம்; ஆனா அவ்ளோ சீக்கிரமும் முடிக்க மாட்டோம் - நெதன்யாகு
அது நடந்துட்டா சண்டைய நிறுத்திடுவோம்; ஆனா அவ்ளோ சீக்கிரமும் முடிக்க மாட்டோம் - நெதன்யாகு
Tesla Showroom: அப்புறம் என்னப்பா.. நாட்டின் முதல் டெஸ்லா ஷோ ரூம் - எங்கெங்கு? எப்போது? எந்த EV கார் கிடைக்கும்?
Tesla Showroom: அப்புறம் என்னப்பா.. நாட்டின் முதல் டெஸ்லா ஷோ ரூம் - எங்கெங்கு? எப்போது? எந்த EV கார் கிடைக்கும்?
Iran USA: ”ஹார்மூஸ் ஜலசந்தியை மூட்றாங்களாம்” சீனாவை ஏற்றிவிடும் அமெரிக்கா, ஆட்சி மாற்றத்திற்கு ட்ரம்ப் ரூட்
Iran USA: ”ஹார்மூஸ் ஜலசந்தியை மூட்றாங்களாம்” சீனாவை ஏற்றிவிடும் அமெரிக்கா, ஆட்சி மாற்றத்திற்கு ட்ரம்ப் ரூட்
Embed widget