மேலும் அறிய

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் 75 வது சுதந்திர தினத்தை 75 நாட்கள் கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டு பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளின் மூலம் இந்தியாவின் சுதந்திரத்தை பறைசாற்றும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் சுதந்திரத்தை போற்றும் வகையில் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என பாரத பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு விதமான சுகந்திர தினவிழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினத்தை பறைசாற்றும் வகையில் விமான நிலையத்தின் உள் பகுதியான செக்கின் பகுதியில் பயணிகள் இந்திய கொடியுடன் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு புகைப்படம் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு விதவிதமான ரங்கோலிகள் வரைவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் முக்கிய பங்காக பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்றடுக்கு பாதுகாப்பானது நேற்று  முதல் நடைமுறைக்கு வந்தது.  இந்த நிலையில் விமான நிலையத்திற்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்ட பின்பு விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப் படுகிறது.


சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

மேலும் விமானத்தில் பயணம் செய்ய தேங்காய், எண்ணெய் வகைகள், மிளகாய் தூள், மிளகாய் உள்ளிட்ட ஏழு வகையான பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது தொடரும் எனவும் விமான நிலைய ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி விமான நிலைய வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மோப்பநாய் குழுவினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழாவை சீா்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் ரெயில், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஸ்கேனர் உதவியுடன் மீண்டும் பொருட்கள் சோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னரே பயணிகள் உடைமையுடன் விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சோதனை வருகிற 17-ந் தேதி வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 


சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை சுதந்திரதினத்தை  வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும்  மாவட்ட நிர்வாகம் மாநகரில் பல்வேறு இடங்களில் வண்ணங்களை பூசி, மக்களை கவரும் வகையிலும்,  மக்களுக்கு 75 ஆவது சுதந்திர தினத்தை நினைவூட்டும் வகையிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.  மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.  மேலும் இந்த 75வது சுதந்திர தின விழாவை பொதுமக்கள் அனைவரும் வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
Rishi Sunak:
Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் 
Breaking News LIVE, June 5: அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார்; வெறும் மாயத்தோற்றம் - பழனிசாமி அதிரடி
Breaking News LIVE, June 5: அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார்; வெறும் மாயத்தோற்றம் - பழனிசாமி அதிரடி
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
Rishi Sunak:
Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் 
Breaking News LIVE, June 5: அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார்; வெறும் மாயத்தோற்றம் - பழனிசாமி அதிரடி
Breaking News LIVE, June 5: அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார்; வெறும் மாயத்தோற்றம் - பழனிசாமி அதிரடி
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Embed widget