மேலும் அறிய

வைகுண்ட ஏகாதசி பெருவிழா-ஸ்ரீரங்கத்தில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் ரங்கா.. கோவிந்தா..கோஷங்கள் முழங்க சொர்க்கவாசல் கடந்தார் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் மார்கழி மாதம் இறுதியிலும், தை மாதம் முதல் நாட்களிலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஶ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது. பொதுவாக மார்கழி மாத சுக்கில பட்ச ஏகாதசி ஒவ்வொரு ஆண்டும் மாத தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ வரும். இந்த ஆண்டு மார்கழி இறுதியில் வருகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான பூபதி திருநாள் எனப்படும் தேர் உற்சவம் தை மாதம் புனர்பூச நாளில் நடக்க வேண்டும் என்பது நியதி. இந்த ஆண்டு புனர்பூசம் நாள் தை மாதம் நான்காம் தேதியே வந்து விடுகிறது. இதனால் திருவத்யயன எனப்படும் வைகுண்ட ஏகாதசி ஒரு மாதம் முன்னதாகவே கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்றே நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 03.12.2021ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா துவங்கியது. பகல்பத்தின் 10ஆம் நாளான நேற்று 13.12.2021 மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


வைகுண்ட ஏகாதசி பெருவிழா-ஸ்ரீரங்கத்தில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

வைகுண்ட ஏகாதசி விழாவில், ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று 14ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 3:30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, பரமபத வாசலுக்கு வந்தடைந்தார். பின்னர் அதிகாலை  சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசலில்  நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி, வைர அபயஸ்தம் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை  4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலை கடந்து சென்று பக்தர்களுக் காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர்நீதிமன்ற நீதிபதிகள், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து 24ம் தேதி வரை ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


வைகுண்ட ஏகாதசி பெருவிழா-ஸ்ரீரங்கத்தில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

மேலும் கொரோனா கட்டுப்பாடுகளால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் காலை 7 மணிக்கு மேல் பக்தர்களை தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கபட்டனர். மக்கள் சென்று வருவதற்கு ஏதுவாக ஸ்ரீரங்கம் கோயில் நுழைவாயிலில் இருந்து தடுப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலமே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வைகுண்ட ஏகாதேசி திருவிழாவிற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் வளாகத்தின் உட்புறப் பகுதியில் 117 சிசிடிவி கேமராக்களும் கோயில் வெளிப்புறப் பகுதியில் 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சொர்க்கவாசல் திருவிழாவிற்காக வரும் பக்தர்களின் தேவைக்காக காவல் உதவி மையம் 70 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது இதேபோன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் அனைத்து வாகனங்களின் நம்பர்களை பதிவு செய்யக்கூடிய வகையில் கேமரா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வழிகாட்டுதலுக்காக 32 இடங்களில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு 14 இடங்களில் உயர் கோபுரங்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள், கழிவறை வசதிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
Embed widget