மேலும் அறிய

’’800 கோடியை அதிமுகவினர் எந்த இடத்தில் செலவு செய்தார்கள் என்பதே தெரியவில்லை’’- கே.என்.நேரு

’’நகர்ப்புற பகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு தயாராக உள்ளோம் தேர்தல் ஆணையம் தான் தேதியை அறிவிக்க வேண்டும்’’

திருச்சி மாவட்டத்தில் தொடர்கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக மழையினால் திருச்சி மாவட்டம்  வயலூர் சாலையில் உள்ள ஆதிநகரின் வழியாகச் செல்லும் உய்யக்கொண்டான் ஆற்றில் நீர்செல்லும் அளவினையும், ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தினையும் பார்வையிட்டு, ஆற்றின் கரைகளில் உள்ள செடிகளை அகற்றி, தூர்வாரிடவும், உயரம் குறைவாகவும் பழுதடைந்தும் உள்ள ஆற்றின் குறுக்கு பாலத்திற்கு பதிலாக புதிதாக உயர்மட்டப் பாலம் அமைத்திட  உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில்  மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள்  எம்.பழனியாண்டி, அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


’’800 கோடியை அதிமுகவினர் எந்த இடத்தில் செலவு செய்தார்கள் என்பதே தெரியவில்லை’’- கே.என்.நேரு

தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு கூறியதாவது, அதிமுகவினர் மாநகராட்சி வளர்ச்சி பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என  குற்றச்சாட்டினார். மேலும் வடகிழக்கு பருவமழையால் திருச்சி உய்யக்கொண்டான் ஆறு மற்றும் கோரையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக லிங்க நகர்‌, சண்முகா நகர், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வயல்களில் வெள்ளம் புகுந்தது. இந்த பகுதிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.மேலும் கடந்த காலகட்டங்களில் அதிமுகவினர் மாநகராட்சி வளர்ச்சி பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை - சின்னச்சின்ன பணிகளை மட்டும்தான் செய்து உள்ளார்களே தவிர முக்கிய பணிகளை செய்ய தவறிவிட்டனர். குறிப்பாக சென்னையில் புளியந்தோப்பு உள்ளிட்ட மூன்று இடங்களில் மட்டும் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.


’’800 கோடியை அதிமுகவினர் எந்த இடத்தில் செலவு செய்தார்கள் என்பதே தெரியவில்லை’’- கே.என்.நேரு

முக்கிய பிரச்சினை என்னவென்றால் சென்னையில் சில இடங்களில் மெட்ரோ வாட்டர் குழாய்கள்,
டிரென்னேஜ் குழாய்கள் பதிக்கப்பட்டு 50 ஆண்டுகள் மேல் ஆகிறது, எனவே இது குறித்து முதல்வரிடம் நாங்கள் கேட்டுள்ளோம் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் உள்ள குழாய்களை மாற்றி அமைக்க உள்ளோம், நிரந்தரமாக பம்பிங் செய்யக்கூடிய முறையை ஏற்படுத்த உள்ளோம் அதற்காகத்தான் தற்போது முதல்வர் குழு ஒன்றை அமைத்துள்ளார். ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வல்லுனர்களை கொண்ட குழுவினர் என்ன சொல்கிறார்களோ அதை நாங்கள் செய்வோம், Under ground drainage பணிகளை துவங்கி முழுமையாக முடிக்க வேண்டும் என்றால் சென்னையில் 4 ஆண்டுகள் கண்டிப்பாக ஆகும்.

நகர்ப்புற பகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு தயாராக உள்ளோம் தேர்தல் ஆணையம் தான் தேதியை அறிவிக்க வேண்டும். மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார் 800 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு நாங்கள் செலவழித்துள்ளோம் என்று கூறுகிறார்கள். ஆனால் 800 கோடி எந்த இடத்தில் செலவு செய்தீர்கள் என்பதை எங்களுக்கு காட்டுங்கள் என்றால் அதற்கு அவர் பதில் சொல்லவில்லை என்றார். எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அவர்கள் பெரிதாக எதையுமே செய்யவில்லை, நடந்திருக்கும் தவறுகளை கண்டுபிடிப்பதற்காக விசாரணை கமிஷனை போட உள்ளோம் என்று முதல்வரே கூறியுள்ளார் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Embed widget