மேலும் அறிய

விரைவில் புனரமைக்கப்பட உள்ள புராதான சின்னமான திருச்சி ராணி மங்கம்மாள் கட்டடம்...!

மத்திய மண்டலத்தில் உள்ள 10 பராம்பரிய கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ராணி மங்கம்மாள் கட்டிடம் உட்பட மத்திய மண்டலத்தில் உள்ள 10 பராம்பரிய கட்டிடங்களை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில்  புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான கட்டிடங்களை பாதுகாக்கவும், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையில் பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டம் உருவாக்கப்பட்டது. இந்த கோட்டம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி, 33 கோடி செலவில் சென்னையில் உள்ள ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தவிர்த்து மாநிலம் முழுவதும் 29 பாரம்பரிய கட்டிடங்களை புனரைமக்க தமிழக அரசு சார்பில் 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


விரைவில் புனரமைக்கப்பட உள்ள புராதான சின்னமான திருச்சி ராணி மங்கம்மாள் கட்டடம்...!

இந்நிலையில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக இந்த பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் புனரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறைத்துறை மீண்டும் தொடங்கி உள்ளது. இதன்படி திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கலெக்டர் அலுவலக புராதான கட்டிடமான ராணி மங்கம்மாள் கட்டடத்தினை மறுசீரமைத்து, புனரமைக்கும் பணி 9.4 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் உதவி பொறியாளர் கண்காணிப்பில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய மண்டலத்தில் உள்ள 8 பராம்பரிய கட்டிடங்களை புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்போது ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வரும் புராதானக் கட்டிடம் 1.46. கோடி செலவிலும், ஆட்சியர் குடியிருப்பாக செயல்பட்டு வரும் புராதான கட்டிடம் ரூ.58.88 லட்சம் செலவிலும், ஆலங்குடியில் தற்போது வட்டாட்சியர் அலுவலம் செயல்பட்டு வரும் புராதானக் கட்டிடம் ரூ.97.46 லட்சம் செலவிலும், திருமயத்தில் தற்போது வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டிம் ரூ.3.43 கோடி செலவிலும், கீரனூரில் தற்போது வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வரும் புராதானக் கட்டிடம் ரூ. 52.68 லட்சம் செலவிலும் புனரமைக்கப்படவுள்ளது.


விரைவில் புனரமைக்கப்பட உள்ள புராதான சின்னமான திருச்சி ராணி மங்கம்மாள் கட்டடம்...!

இதைப்போன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணை கால்வாய் செயற்பொறியாளர் குடியிருப்புபுராதான கட்டிடம் ரூ.1.23 கோடி செலவிலும், தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள மூத்த இளவரசர் குடியிருப்பின் ஒரு பகுதி ரூ.2.45 கோடி செலவிலும், நாகப்பட்டினத்தில் தற்போது மாவட்ட நீதிமன்றம் மற்றும் குற்றவியில் நீதிமன்றம் செயல்பட்டு வரும் புராதான கட்டிடம் ரூ.7.90 கோடி செலவிலும், திருச்சி முதன்மை குற்றவியல் நீதிமன்ற புராதான கட்டிடம் ரூ.1.34 கோடி செலவிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
Embed widget