மேலும் அறிய

ரயிலில் பட்டாசு பெட்டிகளை எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை - ரயில்வே துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை.

தீபாவளி பண்டிகை நாளை 12  ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய உள்ளனர். இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.ரயில்களில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் மற்றும் பட்டாசுப் பொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது என பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று ( 10.11.2023 ) காலை 6 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் அதி வேக விரைவு ரயில் காலை 9.40 மணிக்கு திருச்சி ஜங்ஷன் முதல் நடைமேடையை வந்தடைந்தது. இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், வணிக கோட்ட மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள், ரயில் பயணத்தின் போது பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 


ரயிலில் பட்டாசு பெட்டிகளை எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை - ரயில்வே துறை எச்சரிக்கை

மேலும், ரயில் பயணத்தின் போது கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் அடுப்பு, தீப்பெட்டி, பட்டாசுகள் உள்ளிட்ட எளிதில் தீ பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தினர்‌. மேலும் படியில் தொங்கிக் கொண்டோ, படியில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பது, ரயில்வே கேட் போட்ட பிறகு தண்டவாளங்களை கடந்து செல்வது, ரயில் வரும்போது தண்டவாங்களை கடந்து செல்வது போன்றவற்றை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலாவது நடை மேடையில் நாடகம் மூலம் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்.. தீபாவளி உள்பட பண்டிகை காலங்களில் ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். எளிதில் தீ பற்றி எரியக்கூடிய ஹீட்டர்ஸ், கேஸ் சிலிண்டர் , பட்டாசு, தீ பெட்டி கொண்டு செல்லக்கூடாது. திருச்சி கோட்டத்தில் ரயிலில் கேஸ் சிலிண்டர் கொண்டு சென்றது தொடர்பாக 2 வழக்குகளும், லெவல் கிராசிங் தொடர்பாக 20 வழக்குகளும், ரயில் பெட்டியில் புகை பிடித்தது தொடர்பாக 2 வழக்குகளும்  பதிவு செய்யபட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும். ரயில் நிலையங்களில் மற்றும் ரயிலில் அதிக அளவில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள் ஆகையால் அனைவரின் பாதுகாப்பை கருதி ரயில்வே துறை இத்தகைய முடிவை எடுத்துள்ளது. ஆகையால் பொதுமக்கள் வெடிபொருட்களை அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் எடுத்து பயணம் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget