மேலும் அறிய

புதுக்கோட்டையில் மருத்துவ அதிகாரியின் கையெழுத்தை பயன்படுத்தி ரூ.11¼ லட்சம் மோசடி - பெண் ஊழியர் கைது

புதுக்கோட்டையில் வட்டார மருத்துவ அதிகாரியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ரூ.11¼ லட்சம் மோசடி செய்த சுகாதாரத்துறை பெண் ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை அருகே நச்சாந்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி கணக்காளராக தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் சுகன்யா (வயது 30). இவர் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் பணியாற்றும் செவிலியர்கள், உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது வழக்கம். மேலும் சிறப்பு முகாம் நடத்தினால் அதற்கு பணம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், நச்சாந்துப்பட்டி வட்டார மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருபவர் மனோஜ். இவர் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தனது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி காசோலை மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குரிய வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சத்து 31 ஆயிரத்து 909-ஐ மோசடி செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோசடியில் ஈடுபட்ட சுகன்யாவை கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து சுகன்யா மோசடியில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள்  கூறுகையில்,  காசோலையில் மருத்துவ அதிகாரியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என அவ்வப்போது கடந்த சில மாதங்களாக பணம் எடுத்து வந்துள்ளார். மேலும் தனது வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்துள்ளார். இந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தணிக்கை நடைபெற்ற போது மேற்கண்ட மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டையில் மருத்துவ அதிகாரியின் கையெழுத்தை பயன்படுத்தி ரூ.11¼ லட்சம் மோசடி - பெண் ஊழியர் கைது

மேலும், புகார் தெரிவித்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார் என்றனர். புதுக்கோட்டையில் வட்டார மருத்துவ அதிகாரியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ரூ.11¼ லட்சம் மோசடி செய்த சுகாதாரத்துறை பெண் ஊழியர் கைதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து தனியார் நிதி நிறுவனங்கள், வங்கியில் மோசடி, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி, முதலீடு செய்தால் இரண்டு, மூன்று மடங்கு லாபம் என கூறி மக்களிடம் பணம் மோசடி செய்வது தொடர் கதையாகி வருகிறது. இவற்றை முற்றிலுமாக தடுக்க காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் இது போன்று ஆசைவார்த்தை கூறுபவர்களை யாரும் நம்பி ஏமாறவேண்டும் என தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். ஆனால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற குற்றச்சம்பவங்களை முற்றிலுமாக தடுக்க முடியும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் தற்போது போலி கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்டது பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
Embed widget