மேலும் அறிய

சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை: மாட்டு வியாபாரிக்கு ஆயுள் தண்டனை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாட்டு வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதுரை மாவட்டம்  மேலூர் கொன்னைபட்டியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் வயது 31. இவர் மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ஒருவருடன் மாடு வாங்கி விற்பதில் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவரது வீட்டிற்கு தாமரைச்செல்வன் அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவரது மகளான எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த 14 வயது சிறுமியிடம் தாமரைச்செல்வனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர். மேலும் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.  இந்நிலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை, தாமரைச்செல்வன் கடத்தி சென்று உள்ளார். இதுதொட்பாக சிறுமியின் பெற்றோர் பொன்னமராவதி காவல்நிலையத்தில்  புகார் செய்துள்ளனர்.  அதைத்தொடர்ந்து காவல்துறையினர்  சிறுமியை மீட்டு விசாரித்ததில் தாமரைச்செல்வன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் தாமரைச்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
 

சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை: மாட்டு வியாபாரிக்கு ஆயுள் தண்டனை!
 
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா இன்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக தாமரைச்செல்வனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறையும், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 7 ஆண்டு சிறையும் ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.  மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் இழப்பீடாக தொகையாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் கூறினார். இந்த வழக்கில் ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதால் அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனையை தாமரைச்செல்வன் அனுபவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை: மாட்டு வியாபாரிக்கு ஆயுள் தண்டனை!
 
தமிழகத்தில் தொடர்ந்து சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயதில் முதியவர்கள் அதிக அளவில் பள்ளி மாணவிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்து வருவது கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஆகையால் பெண் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு செல்வதற்கும், பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்கும் பெற்றோர்கள் தயக்கம் காண்பித்து வருகிறார்கள். ஆகையால் தமிழக அரசு சிறுமிகளின் வருங்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு இதுபோன்ற தவறான செயல் நடக்காமல் இருக்க  கடுமையான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Embed widget