மேலும் அறிய

புதுக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் எதிர்ப்பு - காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விராலிமலை அருகே சூரியூரில் ஐகோர்ட்டு உத்தரவுபடி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிய போது விவசாயிகள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, சூரியூர் ஊராட்சிக்குட்பட்ட வில்லாரோடை கிராமம் கத்தலூர் செல்லும் கோரையாற்றுப்பாலம் அருகே தொண்டைமான் குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், கோரையாறு அருகே உள்ள இடங்கள், புதுவயல் நத்தம் பகுதி இடங்கள், மேய்ச்சல் தரிசு புறம்போக்கு இடங்கள் உள்ளிட்ட இடங்களில் சுமார் 50 ஏக்கர் அளவிற்கு வில்லாரோடையை சேர்ந்த 32 பேர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர்.  இதில் அவர்கள் கிணறு மற்றும் போர்வெல் அமைத்து மின் மோட்டார்களை வைத்து விவசாயம் செய்தும், தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகளை வளர்த்தும் வருகின்றனர். இந்நிலையில் கோரையாற்றின் அருகே ஆற்று புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள நபர்கள் கடந்த சில வருடங்களாக தங்களது ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களில் மணல் அள்ளி விற்பனை செய்த வகையில் பல லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. அப்போது மணல் அள்ளி விற்பனை செய்தது தொடர்பாக அப்பகுதியினர் சிலரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு இருந்து வந்தது. 
 

புதுக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் எதிர்ப்பு - காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
 
மேலும்  ஆத்திரமடைந்த வில்லாரோடையை சேர்ந்த பாக்கியம் மகன்கள் சுப்பிரமணி மற்றும் குமாரவடிவேல் ஆகிய இருவரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரணை செய்த ஐகோர்ட்டு மதுரை கிளை ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது.  இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி அன்று காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று காலை வில்லாரோடை கிராமத்தில் விராலிமலை தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மாத்தூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடங்கினர். அப்போது அங்கு வந்த சில விவசாயிகள் தங்களது வயலில் உள்ள வரப்புகளை மட்டம் செய்து ஆக்கிரமிப்பு அகற்றியதை தடுக்க முயன்றனர். 
 

புதுக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் எதிர்ப்பு - காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
 
இந்நிலையில்  அவர்களிடம் தாசில்தார் மற்றும் காவல்துறையினர்  பேச்சுவார்த்தை நடத்தி ஐகோர்ட்டு உத்தரவுபடி ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது என்று கூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இன்று மாலை 5 மணி வரை சுமார் 7 ஏக்கர் அளவிற்கு விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் அங்கு விவசாய கிணறு மற்றும் போர்வெல்லில் கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்புகளும் மின்வாரிய ஊழியர்களால் துண்டிக்கப்பட்டது. இதனால் இனறு வில்லாரோடை கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாளை மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Embed widget