மேலும் அறிய

பெரம்பலூர்: ஓய்வூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில்  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் விவசாயி ராமராஜ் பேசுகையில், "மக்காக்சோளத்தை தனியார் கொள்முதல் செய்வதில் எடை மோசடி நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும். பருத்திக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை முறையாக நடத்தினால் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கும், என்றார். மேலும் 100 நாள் வேலை தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பலருக்கு அவர்களது வங்கிக்கணக்கில் ஊதியம் செலுத்தப்படுவதில்லை. இதனை சரி செய்ய வேண்டும். மாவட்டத்தில் அதிக சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், பருத்திக்கு சிறப்பு உதவித்தொகை பெற்றுத்தர வேண்டும். வேளாண் கொள்முதல் கமிட்டி முறையாக செயல்பட வேண்டும்.


பெரம்பலூர்: ஓய்வூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ளது போல் பெரம்பலூர் மாவட்டத்திலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு 1 ஆண்டிற்குள் திருப்பி செலுத்தும் வட்டியில்லா கடனாக வேளாண் பயிர்க்கடன் வழங்க வேண்டும். 70 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு கடன் வழங்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கும் ஓய்வூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். விவசாயி சிவசாமி பேசுகையில், தொண்டப்பாடி, பாலையூர் கிராமங்களில் கதிரடிக்கும் உலர் களம் அமைத்து தர வேண்டும். பாலையூர் கிராமத்தில் வேத நதியில் படித்துறை கட்டித்தர வேண்டும். கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் மறுபகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு விவசாயிகள் சென்றுவர பாதை அமைத்து தர வேண்டும். மழைக்கு முன்பாக ஏரி, குளங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 


பெரம்பலூர்: ஓய்வூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் உழவர் குழுக்கள் அமைத்து 39 வரத்து வாய்க்கால்கள் ரூ.4 கோடி மதிப்பில் தூர் வாரும் பணிகள் நடைபெறவுள்ளது எனவும், விவசாயிகள் அதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டுமென கலெக்டர் கற்பகம் கேட்டுக்கொண்டார். மேலும் கிரெயின்ஸ் இணையதளத்தில் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய முழு விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டுமென கலெக்டர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சங்கர்.எஸ்.நாராயணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, தோட்டக்கலை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.