மேலும் அறிய

மக்களின் அலட்சியப்போக்கால் திருச்சியில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது- ஆட்சியர் சிவராசு வேதனை

திருச்சி மாவட்டத்தில் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாமல் அதிக அளவில் மக்கள் அலட்சியப் போக்கில் செயல்படுவதே கொரோனா அதிகரிக்க காரணம் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,750 பேர் வரை ஒரே நாளில் தொற்றினால் பாதிக்கபட்டனர். பின்னர் போடப்பட்ட பொதுமுடக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவலானது படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் மீண்டும் கடந்த 2 வார காலமாக தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிடும் கொரோனா பாதித்தவர்கள் பட்டியலில் திருச்சி மாவட்டம் 10ஆவது இடத்தில் உள்ளது. திருச்சி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 29.20 லட்சமாக இருக்கும் நிலையில், இதுவரை மாவட்டம் முழுவதும் உள்ள 10.25 லட்சம் பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுட 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களாக 20.93 லட்சம் பேர் உள்ள நிலையில் இதுவரை 7.50 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 


மக்களின் அலட்சியப்போக்கால் திருச்சியில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது- ஆட்சியர் சிவராசு வேதனை

சதவிகித அடிப்படையில் திருச்சியில்  35.8 சதவிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது. ஆனால் இரண்டாவது தவனை தடுப்பூசியானது 1.84 லட்சம் பேர்கள் அதாவது 24.5 சதவீதம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால்  50 சதவீதத்திற்கு மேல் தடுப்பூசியை மக்கள் செலுத்திக்கொண்டால் மட்டுமே தொற்று பரவுவதை தடுக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் 50 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் பற்றாகுறை இருந்தது, ஆனால் தற்போது திருச்சி மாவட்டத்திற்கு தேவையான ஆக்சிஜன் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது, ஆகையால் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு என்று 100 படுக்கை வசதியுடன்  சிறப்பு வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது.


மக்களின் அலட்சியப்போக்கால் திருச்சியில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது- ஆட்சியர் சிவராசு வேதனை

மேலும் திருச்சி நகரம், ஊரக பகுதிகளில் தொற்று பரவாமல் தடுக்க குழு அமைக்கபட்டுள்ளது, தினந்தோறும் மக்களின் இல்லத்திற்கே சென்று தொற்றின் அறிகுறிகள் ஏதாவது உள்ளதா என கண்டறிவார்கள் இதனால் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். மேலும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல், அலட்சியப் போக்கில் அதிகளவில் கூட்டமாக கூடுவதை பார்க்க முடிகிறது.

கடந்த மூன்று வாரங்களாக திருச்சியில்  கொரோனா தொற்று பாதித்தவர்களின்  எண்ணிக்கை 60 முதல் 70 என தினந்தோறும் வந்து கொண்டிருக்கிறது. தொற்றை  கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அரசு கூறிய விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும், தயங்காமல் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும், சிலர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கத்துடன் இருக்கிறார்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டும் தான் முற்றிலுமாக மூன்றாவது அலையில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Embed widget