மேலும் அறிய

திருச்சி: பழைய காவிரி இரும்பு பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் ஆய்வு

திருச்சி - ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் , பழைய பழைய காவிரி இரும்பு பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க - மாவட்ட நிர்வாகம் முடிவு.

திருச்சி மாநகரம்-ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976-ம் ஆண்டு காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் செல்லும் வழியில் உள்ள இந்த பாலம் பழுதடைந்ததால், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் அந்த வழியாக இருசக்கர வாகனங்களை தவிர பிற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, அவை மாற்றுப்பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள காவிரி பாலத்தில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக திருச்சி ஓயாமரி சாலை மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புது காவிரி பாலம், சஞ்சீவி நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்களும் இந்த வழியாக செல்வதால் கடந்த ஒரு வாரமாக புது காவிரி பாலம் பகுதியில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து வரிசையில் நின்று மெதுவாக சென்று வருகின்றன. காலை, மாலை வேளைகளில் ஒரு வாகனம் அந்த பாலத்தை கடந்து செல்ல அரை மணி நேரம் வரை ஆகிறது. 3 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை இருப்பதாலும், போக்குவரத்து நெரிசலாலும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி அடைந்து வருகிறார்கள்.


திருச்சி: பழைய காவிரி இரும்பு பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் தற்போது பணிகள் நடைபெற்று வரும் பாலத்தின் அருகே உள்ள பழைய இரும்பு பாலத்தில் இருசக்கர வாகனங்களை அனுமதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த இரும்பு பாலமானது 1,754-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டு கடந்த 1,929-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டு 1,976-ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் இந்த பாலம் பழுதடைந்த காரணத்தால் மூடப்பட்டது. தற்போது இந்த பாலத்தின் ஒருபுறத்தில் திருவெறும்பூருக்கு செல்லும் குடிநீர் குழாயும், மறுபுறம் கழிவுநீர் குழாயும் செல்வதால் 2 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் 3 கிலோமீட்டருக்கு மேல் சுற்றிச்செல்வதை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பழைய இரும்பு பாலத்தை மீண்டும் திறந்து, இருசக்கர வாகனங்கள் மட்டுமாவது செல்ல அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.


திருச்சி: பழைய காவிரி இரும்பு பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் ஆய்வு

இந்தநிலையில் பாலத்தின் அகலம் குறைவாக இருப்பதால், ஒரு வழிப்பாதையில் இருசக்கர வாகனங்களை அனுமதிக்கலாமா? அல்லது இருவழியில் அனுமதிக்கலாமா? என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், போலீசாரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இன்று பழைய காவிரி இரும்பு பாலத்தை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன் அந்த பாலத்தில் முளைத்திருந்த புற்களை வெட்டி, பாலத்தை சுத்தப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பாலத்தை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று சுத்தம் செய்தனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இந்த இரும்பு பாலத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சிக்கு இருசக்கர வாகனங்கள் மட்டும் வரும் வகையில் ஒரு வழி பாதையாக பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாலத்தை திறப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
"மாதம் தோறும் உதவித்தொகை வேண்டுமா? விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!"
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
Embed widget