ராமஜெயம் கொலை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை; 13 பேரிடம் மீண்டும் விசாரணை
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் சிறப்பு புலனாய்வுக்குழு மீண்டும் விசாரணை நடத்த உள்ளது.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி மர்ம நபர்களால் கடத்தி சென்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து மாநகர போலீசார், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. என பல்வேறு தரப்பு விசாரணை நடத்தப்பட்டது. அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் தற்போது கோர்ட்டு உத்தரவின்பேரில், சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், திருச்சியை சேர்ந்த சாமி ரவி உள்பட 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் குடவாசலை சேர்ந்த தென்கோவன் தவிர, மற்றவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை குறித்த அறிக்கை சிறப்பு புலனாய்வுக்குழு வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

இதையடுத்து உண்மை கண்டறியும் சோதனையில் பங்கேற்ற அனைவரிடமும் மீண்டும் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக திண்டுக்கல்லை சேர்ந்த தினேஷ்குமாரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடம் சில செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசியது குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மற்றவர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக சிறப்பு புலனாய்வுக்குழு வட்டார தகவல்கள் தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்






















