மேலும் அறிய

டெல்டா மாவட்ட பாசனத்துக்கு கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்த தமிழ்நாடு அமைச்சர்கள்..

வரலாற்றில் முதன்முறையாக குறுவைசாகுபடிக்கு மே மாதமே கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு. தமிழ்நாடு அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியர்கள் நேற்று கலந்துகொண்டனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு  காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, கடந்த 24-ஆம் தேதி  மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  இந்த தண்ணீர், நேற்று தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து அணையில் உள்ள  ஆஞ்சநேயர், ஆதிவிநாயகர், கருப்பண்ண சுவாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், மேளதாளம் முழங்க, நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர்  மகேஷ், மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணி துறை அலுவலர்கள், விவசாயிகள் மலர்கள், நெல்மணிகள் துாவி தண்ணீரை நேற்று திறந்து வைத்தனர். முதல்கட்டமாக, காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளில், தலா 500 கன அடியும், கல்லணை கால்வாயில் 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  தண்ணீர் வரத்தை பொருத்து தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


டெல்டா மாவட்ட பாசனத்துக்கு கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்த தமிழ்நாடு அமைச்சர்கள்..


இதன் மூலம், தஞ்சாவூர் 1.11 லட்சமும், திருவாரூர் 93 ஆயிரம், நாகை 19,700, மயிலாடுதுறை 86,500, கடலூர் 27,700, அரியலூர் 2,500 என 3.38 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நிருபர்களிடம் கூறிய போது.. கல்லணையின் கீழ் பகுதியில் 3.38 லட்சம் ஏக்கரிலும், மேட்டூரின் கீழ்பகுதியில் 5.21 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட உள்ளது. கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் 924 ஏரிகள் நிரப்பப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதம் 400 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது. கடைமடைக்கு காவிரியில் தண்ணீர் சென்ற பிறகு, 36 ஆறுகளிலும் தண்ணீர் திறக்கப்படும். சம்பிரதாயமாக கல்லணை கால்வாயில் 100 கன அடி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாய், வடவாறு போன்றவற்றில், கட்டுமானப் பணிகள் பத்து நாள்களில் முடிவடையும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  


டெல்டா மாவட்ட பாசனத்துக்கு கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்த தமிழ்நாடு அமைச்சர்கள்..

அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் முழுமையாக திறக்கப்படும். குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்கும். 3.38 லட்சம் ஏக்கர் பரப்பளவு என்பதே கடந்த ஆண்டை விட கூடுதலாக உள்ளது. விவசாயிகளை பாதிக்காத வகையில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறக்கப்படும். தென்மேற்கு பருவ மழை குறையாது என்ற பெரிய நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு சாகுபடிக்கு  தண்ணீர் பிரச்னை இருக்காது. கடந்த காலங்களில் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்காமல் காலம் தாழ்த்தி தண்ணீர் திறக்கப்பட்டதால், வீணாக கடலில் கலந்தது. தண்ணீரை கொண்டு, படிப்படியாக அனைத்து ஏரிகளும் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் வழக்கமாக கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு,  நான்கு ஆறுகளிலும் சேர்த்து மொத்தம் 20 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு, கல்லணைக்கு போதுமான நீர் இருப்பு வந்து சேருவதற்கு முன்னதாகவே, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் கடந்த 24ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், இன்னும் முழுமையாக வந்து சேராத நிலையில், கல்லணை கால்வாயில் 100 கன அடி தண்ணீர் சேர்த்து, 1,600 கன அடி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா பாசனத்துக்கு திறக்கும்போது கல்லணையில் இருந்து, தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை காண முடியவில்லை. 

தலைப்பு செய்திகள்

Trichy power cut: திருச்சியில் (07-07-2026) நாளை முழு நேர பவர் கட் இடங்களின் லிஸ்ட் வந்தாச்சு - செக் பண்ணிக்கோங்க
திருச்சியில் (07-07-2026) நாளை முழு நேர பவர் கட் இடங்களின் லிஸ்ட் வந்தாச்சு - செக் பண்ணிக்கோங்க
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget