மேலும் அறிய

தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

விவசாயிகளுக்கு நிவாரண நிதியை உயர்த்தி 20 ஆயிரமாக  தர வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தார். 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மதிமுக சார்பாக காவிரி பிரச்சனை, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய் என்ற கோரிக்கையை முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி கண்டன முழக்கம் எழுப்பினார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியது..  காவிரி ஆற்றில் இருந்து முறையாக தண்ணீர் திறந்து விடாமல் விவசாயிகளை பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.காவேரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை, அதே சமயம் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் சொல்வதையும் கர்நாடக அரசு பொருட்படுத்தவில்லை.  தஞ்சை மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாததால் கருகிவிட்டது. இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடுகளவு கூட மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார். இந்த மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசை கண்டிக்கிறோம். 


தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

மேலும் பொருளாதார ஏற்ற தாழ்வை சமன் செய்ய கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு போதிய நிதியை வழங்காமல் ஏழை,  எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம். நமது நாட்டில் கிட்டத்தட்ட 16 கோடி ஏழை எளிய மக்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த 16 கோடி மக்களுக்கு 100 நாட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றால் ஆண்டுக்கு 2 லட்சம் 70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். அவ்வாறு நிதியை ஒதுக்காமல் ஆண்டுக்கு ஆண்டு நிதியை குறைத்து வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். 


தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

தமிழ்நாட்டில் விவசாய நிலங்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் விவசாயத்தில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.  நம் நாட்டு மக்களை  முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். காவிரி விவகாரத்தில் மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகா அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு மாநில அரசுக்கு பல்வேறு விதமான அழுத்தங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.  மேலும், விவசாயிகளுக்கு நிவாரண நிதியை உயர்த்தி 20 ஆயிரமாக  தர வேண்டும் என மாநில
அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தார்.  தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை முதன்முதலாக கையில் எடுத்தது வைகோ அவர்கள் தான்,  அந்தத் திட்டம் அப்போதே செயல்படுத்தப்பட்டு இருந்தால்,   இது போன்ற பிரச்சனைகள் எதுவும் தற்போது வந்திருக்காது என்றார். 


தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் - துரை வைகோ பேட்டி

வருகின்ற தேர்தலில் நான் போட்டியிட விருப்பமில்லை என  ஏற்கனவே தெரிவித்து விட்டேன். மேலும் வருகின்ற தேர்தலில் மதிமுகவிற்கு இடங்கள் ஒதுக்குவது குறித்து எங்கள் கட்சி மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள். அதேசமயம் தேர்தலில் எங்களது சின்னமான பம்பரம் சின்னத்தில் நிற்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம் அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என நிறைவேற்றுவார்  நம்பிக்கை உள்ளது. பாஜக - அதிமுக கூட்டணி இருந்து விலை கேட்டு அவர்களுடைய தனிப்பட்ட முடிவு. அதேசமயம் அதிமுக சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை பெற முயற்சி செய்து வருகிறது. ஆனால் மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று.  எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது வலுவாக உள்ளது. மற்ற கட்சிகளில் கூட்டணி பிரிவதற்கு,  எங்கள் கட்சியில் கூட்டணி பிரிவு ஏற்படும் என சந்தேகங்கள் தேவையில்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget