மேலும் அறிய

Lok Sabha Election 2024: "செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்" துரை வைகோ உருக்கம்!

செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று திருச்சி வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ அறிமுக மற்றும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக-  கூட்டணி கட்சி தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


Lok Sabha Election 2024:

மேடையில் பேசிய மதிமுக வேட்பாளர் துரை வைகோ கூறியது,

திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சரும் கே.என். நேரு , அன்பில் மகேஷ், ரகுபதி, மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டார்.கடந்த 3 நாட்களாக அமைச்சர் நேரு ஒரு இறுக்கமாக இருந்தார். இன்றுதான் அவர் சிரித்து நான் பார்க்கிறேன். அருண் நேரு போன்று தான்,  நானும் உங்களுக்கு எனக் கூறினார்.

விருப்பமில்லாமல் அரசியலுக்கு வந்தேன்:

அரசியலுக்கு வருவதற்கு துளிகூட விருப்பம் இல்லை. அனைவருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை ஒன்றுதான் காரணமாக அமையும். இறப்பு என்பது மனிதர்களாக பிறந்தவர்களுக்கு அனைவருக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். எனது அப்பா கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அடுத்தது கட்சியை யார் வழி நடத்துவது என்பது வெறும் பேசும் பொருளாகவும், கேள்விக்குறியாகவே இருந்தது. அப்போது என் கட்சியினர் அனைவரும் என்னை தேர்வு செய்தார்கள். எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை கட்சியில் முக்கிய, மூத்த நிர்வாகிகள் பலர் உள்ளனர், அவர்களை கட்சியை வழி நடத்த வேண்டும் என நான் கூறினேன். ஆனால் அதற்கு யாரும் ஒத்துழைக்கவில்லை.


Lok Sabha Election 2024:

செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டி

என் அப்பா ஒரு சகாப்தம் என்று கூறும்போது மேடையில் அனைவரும் முன்பும் கண்கலங்கி அழுதார். என் அப்பாவுக்கு பிறகு அவர் ஓடி ஓடி உழைத்து வளர்த்த கட்சி அழிந்து விடக்கூடாது என்பதற்காக நான் அரசியலுக்கு வந்தேன். என்னை கட்டாயப்படுத்தி, வலு கட்டாயமாக அரசியலுக்கு வரவழைத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் என் அப்பாவிற்கு தலைகுணிவு வரக்கூடாது என்பதற்காக விருப்பமே இல்லாமல் அரசியலுக்கு வந்தேன்.  எங்களை புண்படுத்தாதீர்கள் எங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்றாலும் தொடர்ந்து திமுகவுடன் பயணித்திருப்போம். எங்களுடைய நோக்கம் தமிழ்நாட்டில் மதவாத கட்சி பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பது மட்டுமே. மீண்டும் எங்களை புண்படுத்தாதீர்கள்.க்ஷ

இன்று மேடையில் கூறிய போது திமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் எந்த சின்னத்தில் போட்டியிட போறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினர். செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். நான் சுயமரியாதை காரன். மீண்டும் எங்களை புண்படுத்தாதீர்கள் நாங்கள் சிறிய கட்சி தான். இந்த தேர்தலில் கூட எனக்காக நான் வாய்ப்புகள் கேட்கவில்லை என் கட்சியில் இருக்கக்கூடிய சில நபர்களுக்காக வாய்ப்பு கேட்டேன். ஆனால் அனைவரும் என்னை நிறுத்தி விட்டார்கள். வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்திருந்தாலும் நாங்கள் உங்களுடன் இணைந்து பயணித்திருப்போம். இந்த செயல்வீரர் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Embed widget