மேலும் அறிய

ஆயுதம் ஏந்த சொன்ன ஈவிகேஎஸ்...! அழகாக பேசி சமாளித்த ப.சிதம்பரம்...!

’’பேச்சு, எழுத்து, கட்டுரை, சுட்டுரை இவையணைத்தும் ஆயுதங்கள். அந்த ஆயுதங்களை கையில் ஏந்த வேண்டும் என்று தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சொன்னார் என நம்புகிறேன்’’

இந்தியாவில் 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் தண்டி யாத்திரை நடத்தப்பட்டு உப்பு எடுக்கிற போராட்டம் நடைபெற்றது. இதுவே இந்திய விடுதலையின் தொடக்கமாக இருந்தது. அதே போல், அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் திருச்சியில் இருந்து நடைபயணம் மேற்கொண்டு வேதாரண்யத்தில் உப்பு எடுக்கிற சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்கள் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு பெருமையுடன் சான்றுகளாக இன்றளவும் உள்ளன. இந்த நிலையில், மூதறிஞர் ராஜாஜி தலைமையில் அன்று நடந்த வேதாரண்ய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை மீண்டும் நினைவு கூறுகிற வகையில், திருச்சியில் இருந்து வேதாரண்யம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை  திருச்சி ஜங்‌ஷன், திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களது இல்லத்தில் இருந்து வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை தொடக்க விழாவை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.


ஆயுதம் ஏந்த சொன்ன ஈவிகேஎஸ்...! அழகாக பேசி சமாளித்த ப.சிதம்பரம்...!

இந்த நிகழ்ச்சியில் வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், நீதிமன்றங்களில் வாதாட கூடாது, அந்நியத் துணிகள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் என நாட்டின் விடுதலைக்கு தேவைப்பட்டது. வெள்ளையர்களை விட கொடியவர்களான மோடியையும், அமித்ஷாவையும் தூக்கி எறிவதற்கு இந்தகைய  நடைபயணம் அவசியம். வெள்ளைக்காரர்கள் நாகரிகமானவர்கள், அதனால் அவர்களை எதிர்த்து அகிம்சை வழியில் போராடினோம். காங்கிரஸ்காரர்கள் ஆயுதம் ஏந்த மாட்டார்கள். பாஜக ஆட்சி தொடர்ந்தால் மாநிலங்கள் தனித்தனி நாடுகளாக மாறும் அபாயம் உள்ளது. நாட்டில் உள்ள மொழி, உணவு, உடை வேறுபாடுகளை வைத்து பாஜக அரசு அரசியல் செய்கிறது. இதில் பன்முகப்பட்ட பண்பாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும். அதற்கு ஆயுதம் எடுக்க வேண்டும் என்று சொன்னாலும்,  அதனை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றார்.


ஆயுதம் ஏந்த சொன்ன ஈவிகேஎஸ்...! அழகாக பேசி சமாளித்த ப.சிதம்பரம்...!

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,  உப்பு சத்தியாகிரக நடைபயணத்தை பற்றி பலருக்கு தெரியாது. தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த நடைபயணம் அமையும். உப்பு என்பது ஒரு அடையாளம் தான். இன்றைக்கு அதற்கு இணையாக மொழி, உணவு, உடை, கலாச்சாரம் போன்றவை அடையாளமாக உள்ளன. சுதந்திரம் பறிபோகும் போது இந்த உரிமைகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தலையிடுகிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் தருவதல்ல உரிமை. உரிமைகள் எது என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். சுதந்திரம் நாள்தோறும் இந்த நாட்டில் பறிபோகிறது. இது நீடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய அனைத்து சுதந்திரங்களும் பறிபோய் விடும். பேச்சு, எழுத்து, கட்டுரை, சுட்டுரை இவையணைத்தும் ஆயுதங்கள். அந்த ஆயுதங்களை கையில் ஏந்த வேண்டும் என்று தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சொன்னார் என நம்புகிறேன். மேலும் இந்த நட பயணம் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னோட்டம் என்று வைத்துக்கொள்ளலாம் என குறிபிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, மற்றும் மூத்த தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மேலும் நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் காங்கிரங் கட்சி தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget