மேலும் அறிய

திருச்சியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு - தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

’’ஒரு நாளைக்கு 2,000 முதல் 6,000 வரை சோதனையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம்  திட்டம்’’

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களாக  மூன்று இலக்கத்தைத் தாண்டியதால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 மாதிரிகள் வரை RT-PCR சோதனையை அதிகரித்துள்ளது. மேலும் பரிசோதனையை  தீவிரப்படுத்த ஒரு பிரத்யேகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் புதிய நோய்த்தொற்றுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருச்சி மாநகராட்சி, நகரில்  பகுதிகளில் தொற்று விகிதம் இன்னும் கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிகின்றனர். மேலும்  ஒரு நாளைக்கு 2,000 முதல் 6,000 வரை சோதனையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம்  திட்டமிட்டுள்ள நிலையில், நகரம் அதன் தற்போதைய சோதனை அளவை இரட்டிப்பாக்கும் என்றனர்.


திருச்சியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு - தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

மேலும் பிரத்யேக குழு அமைக்கபட்டு தடுப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரபடுத்தி உள்ளது. மேலும் தடுப்பூசி போடப்பட்டு மற்றும் அறிகுறியற்ற தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்  தங்களது வீட்டிலியே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் நிலையை கருத்தில் கொண்டு தகுதியானவர்களை வீட்டில் தனிமைப்படுத்த அனுமதிக்கிறோம். சோதனை செய்த தடுப்பூசி போடப்பட்டவர்கள் பெரும்பாலும் அறிகுறியற்றவர்கள், என்று நகர சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும்  திருச்சி மாநகராட்சி, கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க மொபைல் குழுவை நியமிக்கவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய மொபைல் ஹெல்ப்லைனைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. யாத்ரி நிவாஸ், பாரதிதாசன் பல்கலைக்கழகம் (கஜாமலை) மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரியில் மூன்று கோவிட் பராமரிப்பு மையங்கள் அமைக்க  திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.


திருச்சியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு - தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

திருச்சி மாவட்டத்தில் தகுதியான  மக்கள் தொகையில் சுமார் 82 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 64 சதவீதம் பேர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மூன்றாவது அலை தீவிரமடைவதற்கு முன், தடுப்பூசி செலுத்த  தகுதியான மக்கள் தொகையில் 90 சதவீதமாக  அதிகரிக்க  மாவட்ட சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் வணிக வீதிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. கண்காட்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரில் பல இடங்களில் துணி விற்பனை கண்காட்சி நடப்பதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு கூறிய விதிமுறை முழுமையாக மக்கள் பின்பற்ற வேண்டும். குறிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், கூட்டம் கூடுவதை தவிற்க வேண்டும், தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட அதிகாரிகள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget