மேலும் அறிய

Crime: மனைவி கண் முன்னே கணவன் வெட்டிக்கொலை.. படுகாயங்களுடன் உயிர்தப்பிய மகன் - திருச்சியில் நடந்தது என்ன?

மணப்பாறை அருகே மனைவி கண் முன்னே கணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மகனுக்கும் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 62). ஐஸ் வியாபாரியான இவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் 3-வதாக மாற்றுத் திறனாளி பெண்ணான சீரங்கம்மாள் என்பவரை திருமணம் செய்துள்ளார். சீரங்கம்மாளுக்கு வாய்பேச முடியாது, காதும் கேட்காது. இந்த தம்பதிக்கு மாரிமுத்து (25), புகழேந்தி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சொந்த ஊரான கரும்புளிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த குப்புசாமி, அதன்பின் பொத்தமேட்டுப்பட்டியில் வசித்து வந்தார்.
 
மனைவி முன்பே கணவன் கொலை:
 
இந்நிலையில் நேற்று காலையில் மாரிமுத்து சீரங்கம்மாளை மொபட்டில் அழைத்துக் கொண்டு கரும்புளிப்பட்டிக்கு பருத்தி எடுக்கச் சென்றார். தந்தை குப்புசாமி மற்றொரு மொபட்டில் சென்றார்.அப்போது, மழை தூறியதால் பருத்தி எடுக்காமல் மீண்டும் பொத்தமேட்டுப்பட்டி நோக்கி புறப்பட்டுச் சென்றனர். தாய், தந்தை, மகன் ஆகிய 3 பேரும் மொபட்டுகளில் குளித்தலை-மணப்பாறை சாலையில் கலிங்கபட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தனர். முதலில் மாரிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
 
இதில் தலை மற்றும் கையில் அரிவாள் வெட்டு விழுந்ததால் மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் சாலையில் மயங்கி விழுந்தார். அவர் இறந்து விட்டார் என்று எண்ணிய கும்பல் குப்புசாமியையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
 

Crime: மனைவி கண் முன்னே கணவன் வெட்டிக்கொலை.. படுகாயங்களுடன் உயிர்தப்பிய மகன் - திருச்சியில் நடந்தது என்ன?
 
உயிருக்கு ஆபத்தான நிலையில் மகன்:
 
இதனை தொடர்ந்து மகனும், கணவரும் தன் கண்முன்னே வெட்டப்படுவதை கண்ட மாற்றுத்திறனாளியான சீரங்கம்மாள் கதறி அழுதார். இதற்கிடையே அந்த வழியாக வந்த பொதுமக்கள் மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் அரிவாள் வெட்டு விழுந்தவுடன் மாரிமுத்து மயங்கியதால் கொலையாளிகளிடம் இருந்து உயிர்தப்பினார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.
 
6 பேர் கைது:
 
மேலும் இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் மாரிமுத்துவுக்கும் வாலிபர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு அது தொடர்பான வழக்கு மணப்பாறை போலீஸ் நிலையத்தில் உள்ளது. இது தொடர்பாக அந்த வாலிபருக்கும், மாரிமுத்துவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாக அந்த வாலிபர் உறவினர்களுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.
 
இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இக்கொலை தொடர்பாக கரும்புளிபட்டியை சேர்ந்த தினேஷ் (25), தேவா (20), மணிகண்டன் (25), சந்துரு (22), கரூர் மாவட்டம், தேவர்மலையை சேர்ந்த பிரவின் (24), அவரது சகோதரர் ஸ்டாலின் (21) ஆகிய 6 பேரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Embed widget