மேலும் அறிய

திருச்சியில் 9 நாட்களில் 979 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரை கொரோனா தொற்றால் 979 பாதிக்கபட்டுள்ளனர் என மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா 3 வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில்  திருச்சி மாவட்டத்தில் இதுவரை 79863 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77,808 நபர்கள் குணமடைந்து, 958 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 1104 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை திருச்சி மாவட்டத்தில் மட்டும் 979 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று  தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும், மருந்துகளும், மருத்துவ ஆக்சிஜனும் பாதுகாப்பு உபகரணங்களும் கையிருப்பில் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா நோயாளிகளை தீவிரத் தன்மை கொண்டு அவர்களை வகைப்படுத்தி சிகிச்சைக்காக கொரோனா சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனை பரிந்துறைப்பதாக 22 வகைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முதற்கட்டமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் காலையில் 200 படுக்கைகளுடன் இன்று முதல் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட உள்ளது.


திருச்சியில் 9 நாட்களில் 979 பேருக்கு கொரோனா பாதிப்பு

மேலும் திருச்சி  மாவட்டத்தில் உள்ள 14 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தற்காலிகக் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட உள்ளது. அறிகுறி இல்லாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. நோய் அறிகுறியுடன் உள்ளவர்கள் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 5 நாள்கள் சிகிச்சைக்குப் பின் கண்காணிக்கப்படுவார்கள் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி மாவட்டத்தில்  18 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 21,86,100, இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 19,23,845, இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் 88 சதவீதம் ஆகும். இதேபோல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 12,76,051, இதுவரை இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் 58 சதவீதம் ஆகும். மொத்தம் இதுவரை 31,99,896 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது.


திருச்சியில் 9 நாட்களில் 979 பேருக்கு கொரோனா பாதிப்பு

இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசியை சிறார்களுக்கு செலுத்த திட்டமிட்டு நாடு முழுவது செலுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசியை செலுதித்துக்கொள்ள தகுதியுடைய 15-18 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 1,26,400 ஆகும். இதில் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள்  எண்ணிக்கை 1,01,980 ஆகும். இது தடுப்பூசி செலுத்தப்பட்ட  சதவீதம் 80.7 என அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் கொரோனா 3 வது அலை தீவீரமாக பரவி வருவதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற செயல்களை மறக்காமல் கடைபிடிக்க வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Embed widget