மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திருச்சி : கடந்த 4 மாதங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 5,701 பேர் கைது..
திருச்சி மாநகரில் கடந்த 4 மாதங்களில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 5 ஆயிரத்து 701 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்- திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன்
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்
திருச்சி மாநகரில் சட்டத்திற்கு விரோதமாக தொடர்ந்து கஞ்சா, புகையிலை, போன்ற போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. அதேசமயம் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிப்பறி, போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடந்து வருகிறது. இவற்றை அனைத்தையும் முழுமையாக கட்டுபடுத்த திருச்சி மாநகர் காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் அனைத்து காவல்நிலையங்களிலும் 24 மணி நேரம் காவலர்கள் பாதுக்காப்பு பணியில் ஈடுபடவேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி மாநகரில் பொதுமக்களை அச்சுறுத்தல், திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றவழக்குகளில் ஈடுபட்டதாக கடந்த 2020-ம் ஆண்டு 40 பேர் மீதும், 2021-ம் ஆண்டு 85 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கடந்த 4 மாதங்களில் 62 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்த 60 பேர் மீதும், பொது அமைதியை பேணிக்காப்பதற்காகவும், நன்னடத்தைக்கான பிணையம் பெறவேண்டி 290 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நன்னடத்தைக்கான பிணையம் பெற்றிருந்தும், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 13 ரவுடிகள் உள்பட 18 ேபர் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவரால் சிறை தண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 296 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 4 ஆயிரத்து 429 பேர் என மொத்தம் 5 ஆயிரத்து 701 பேரை கைது செய்து அவர்கள் மீது உரிய சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் கொலை மற்றும் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது என்றார்.
இதனை தொடர்ந்து திருச்சி மாநகரில் தொடர்ந்து 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுக்காபு பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆகையால் மக்கள் அச்சபட தேவயில்லை என்றார். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தல், திருச்சி, வழிபறி, கொலை,கொள்ளை, போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், வழிப்பறி குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion