மேலும் அறிய

திருச்சி : பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 13 பேர் ஒரே நாளில் கைது..

திருச்சி மாநகரில் திருட்டு, கொள்ளை, கஞ்சா விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என ஒரே நாளில் 13 பேர் கைது- திருச்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்

திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்தி சில மாதங்களாக  பொதுமக்களை அச்சுறுத்தி சங்கிலி பறிப்பு மற்றும் செல்போன்களை பிக்பாக்கெட் அடிப்பது போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த  குற்றவாளிகளை பிடிக்க மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்பேரில் அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறை அதிகாரிகள்  புலன்விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் திருச்சி மாநகரத்தில் செல்போன்களை பிக்பாக்கெட் அடித்து சென்ற சஞ்சீவி, அபுதாகீர், அஜ்மத்அலி ஆகிய 3 பேர் காந்திமார்க்கெட் பகுதியிலும், கார்த்தி என்ற பல்லு கார்த்தி, ஜாக்கி என்ற பிரசாந்த், ஜெயசீலன் ஆகிய 3 பேரும், பாலக்கரை - குட்ஷெட் ரெயில்வே மேம்பாலம் மற்றும் கே.கே.நகர் பகுதியிலும், இப்ராஹிம் என்ற இட்லி, சபீர், ஜாபர்சாதிக், காதர் ஆகிய 4 பேர் கோட்டை பகுதியிலும், லதா, ராமு என்ற ராஜி ஆகிய 2 பேர் எடமலைப்பட்டிப்புதூர் பகுதியிலும், குணசேகரன் என்பவர் கண்டோன்மெண்ட் பகுதியிலும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டது.


திருச்சி : பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 13 பேர் ஒரே நாளில் கைது..


இதனை தொடர்ந்து திருச்சி மாநகர் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த ராம்ஜிநகர் மில் காலனியை சேர்ந்த அய்யப்பன் (43) என்பவரை எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை ரோடு ஹவுசிங் போர்டு பகுதியில் கஞ்சா விற்றதாக சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவை சேர்ந்த விக்கி என்கிற டேனியேல் விக்கி (22) என்பவரை பாலக்கரை காவல்துறை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கைதான விக்கி மீது பாலக்கரை மற்றும் கே.கே.நகர் காவல் நிலையங்களில் கொலை மிரட்டல் விடுத்தல், கஞ்சா விற்றதாக ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விராலிமலை அருகே உள்ள தென்னிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமலை (42). இவர் கடந்த 26-ந் தேதி தனது மொபட்டில் திருச்சி வந்தார். திருச்சி பாலக்கரை மெயின் ரோட்டில் உள்ள ஒரு டிரேடர்ஸ் முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது, யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மொபட்டை திருடிய தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்த பெரோஸ்கான் (38) என்பவரை கைது செய்தனர்.


திருச்சி : பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 13 பேர் ஒரே நாளில் கைது..


திருச்சி மாநகரில் லாட்டரி விற்பனை அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில்  கீழபுதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (53). இவர் 10 நாட்களுக்கு முன்பு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளது. ஆனால் அதற்கான தொகையை லாட்டரி விற்பனையாளர்களிடம் கேட்ட போது பரிசு தொகையை கொடுக்காமல் அவரை மிரட்டி விரட்டி உள்ளனர். இது குறித்து பொன்மலை போலீசில் மாணிக்கம் புகார் அளித்தார். அதன் பேரில் லாட்டரி சீட்டுக்கான பரிசுத்தொகை தராமல் ஏமாற்றிய சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த குமார் (36) மற்றும் ஞானசேகர் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமார் மீது லாட்டரி சீட்டுகள் விற்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் 13 வழக்குகள் உள்ளதாகவும்  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget