மேலும் அறிய

Thirumavalan Speech: "அரசியலில் தனித்து நிற்பதை விட, தாக்கு பிடித்து நிற்பது தான் பெரிது" - திருமாவளவன் எம்.பி.

தமிழகத்தில் பா.ஜ.க. தூண்டுகிற இந்து உணர்வுக்கு தலித்துக்களும் இறையாகிறார்கள் என்பது தான் அதிர்ச்சிக்குரியது என திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் 60-வது பிறந்தநாள் மணி விழாவையொட்டி கட்சியின் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் மாமனிதருக்கு மணி விழா திருச்சியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன்,  திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது, "இன்றைக்கு நாடு ஒரு பேராபத்தில் சூழ்ந்துள்ளது. இந்த தேசத்திற்கு மிகப்பெரும் ஆபத்து மத வெறியர்களால் உண்டாகி இருக்கிறது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால்  எந்த எல்லைக்கும் போவார்கள். இந்த தேசம் மதம் சார்ந்த தேசமாக இருக்க வேண்டும், இந்த தேசத்திற்கு இந்து ராஷ்ட்ரம் என பெயர் சூட்ட வேண்டும் என்பது தான் அவர்களின் இறுதி இலக்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


Thirumavalan Speech:

சமூகநீதி:

மக்கள் மதம் சார்ந்தவராக இருக்கலாம், ஆனால் அரசு எந்த மதத்தையும் சார்ந்தவர்களாக இருக்கக் கூடாது என்பதுதான் மதசார்பின்மை. மத சார்பற்ற நாடாக இருந்தால் தான் நீதி நிலைநாட்டப்படும். பாஜகயை எதிர்க்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு மட்டும் தான் இருக்கிறது என்றில்லை. ஆர்எஸ்எஸ் வலிமை பெற்றால் சனாதனம் வலிமை பெறும், சமூகநீதி குழி தோண்டி புதைக்கப்படும். பா.ஜ.க. என்பது சராசரி அரசியல் இயக்கமில்லை, ஆர்.எஸ்.எஸ்.யின் அரசியல் இயக்கம்.

இன்றைக்கு மொழி ,வழி தேசியம் எல்லா மாநிலங்களிலும் வளர்ந்து வருகிறது. ஆனால் பாஜக வளர்த்தெடுப்பது மதவழி தேசியம் ஆகும்.  இந்து மக்களின் கடவுள் நம்பிக்கையை பாஜக  அவர்களின் அரசியல் வேட்கைக்காக பயன்படுத்திக் கொள்கிறு . காங்கிரஸ் , பாஜக தேர்தல் போர் என்று எண்ணாமல் ஒட்டுமொத்த தேசத்தை காப்பதற்கு பாஜகவை எதிர்க்கிறோம் என்ற பார்வை நமக்கு வேண்டும்.  பாஜக தூண்டுகிற இந்து உணர்வுக்கு தலித்துக்களும், இறையாகிறார்கள் என்பது தான் அதிர்ச்சிக்குரியது. தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற வேண்டும் என்பதற்காக தலித் வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் யுக்தி.


Thirumavalan Speech:

தாக்குப்பிடித்து நிற்பதே பெரிது:

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகளை, பா.ஜ.க.வால் ஒருபோதும் சீண்ட முடியாது. அரசியலில் தனித்து நிற்பதை விட தாக்கு பிடித்து நிற்பது தான் பெரிது. தேர்தல் களத்தில் ஒவ்வொரு கட்சியும், தனக்கான வாக்கு வாங்கியை நிரூபித்துக் காட்டி தான் கூட்டணியில் இடம் பெற்றார்கள். ஆனால்  தனித்து போட்டியிடாமல் வாக்கு வங்கியை நிரூபிக்காமல் தொடர்ந்து கூட்டணியில் இடம்பெறும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தான். 

காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டவர்கள் வலிமை பெறுவதற்காக இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும். சமூக நிதியை குழி தோன்றி புதைக்க திட்டம் தீட்டுபவர்களை விரட்டி அடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமை பெற வேண்டும். அம்பேத்கர் வடிவமைத்து தந்த அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்க்காக தேர்தல் அரசியலை தவிர்த்து கூட போராட்டக் களத்தில் நிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி. தமிழகத்தில் 6 ஆயிரம் கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகம் உருவாக அரசு ஊழியர்கள் துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

தலைப்பு செய்திகள்

"முதல்வர் விஜய் எங்கள் வயிற்றில் அடித்துள்ளார்" - பால் உற்பத்தியாளர்கள் கொந்தளிப்பு; ஆவின் பால் நிறுத்தம்?
GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget