மேலும் அறிய

என் மீது அக்கறை காட்டதால் தாயையும் தந்தையும் அடித்து கொன்றேன் - மகனின் வாக்குமூலத்தால் பரபரப்பு

என் மீது அக்கறை கொள்ளாததால் தந்தை, தாய் ஆகியோரை அடித்து கொன்ற மகன் பாலசுந்தரை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவூர் அருகே உள்ள மண்டையூர் நாட்ரியன்காடு பகுதியை சேர்ந்த விவசாயி ரெங்கசாமி (60), இவரது மனைவி வள்ளி (57). இவர்களுக்கு பாலசுந்தர் (27), கோபி, சங்கீதா என்ற 3 பிள்ளைகள் உள்ளனர். கேட்டரிங் படிப்பு முடித்துள்ள பாலசுந்தர் வெளியூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் எங்கும் வேலைக்கு செல்லாமல்  யாரிடமும் சரியாக பேசாமல் மனநலம் பாதிக்கப்பட்டது போல பிரமை பிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்து வந்துள்ளார். பாலசுந்தருக்கும், பெற்றோருக்கும் அடிக்கடி சண்டைகள் வந்த நிலையில்  பாலசுந்தருக்கு முனி பிடித்துள்ளதால் தான் இவ்வாறு இருப்பதாக நினைத்து ரெங்கசாமி பாலசுந்தருக்கு ஒரு உடுக்கை பூசாரி மூலம் முனியை விரட்டுவதற்கு ஏற்பாடு செய்து, அவரது வீட்டிற்கு பூசாரியை வரவழைத்திருந்தார். இந்த தகவல் பாலசுந்தருக்கு தெரியவரவே அவரது தாய் தந்தையிடம் இதுகுறித்துகேட்டு தகராறு செய்தாக கூறப்படுகிறது.
 

என் மீது அக்கறை காட்டதால் தாயையும் தந்தையும் அடித்து கொன்றேன் - மகனின் வாக்குமூலத்தால் பரபரப்பு
 
இந்நிலையில் நேற்று முன்தினம் ரெங்கசாமி வீட்டிற்கு பால் கறக்க வந்த பால்காரர், ரெங்கசாமி மற்றும் வள்ளி ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அருகில் உள்ளவர்கள் மூலம் காவல்துறைக்கு  தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாத்தூர், மண்டையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து, பாலசுந்தரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். காவல்துறையின் தீவிர விசாரணையில் பெற்றோரை தான் கட்டையால் அடித்தும், குத்தியும் கொலை செய்ததை பாலசுந்தர் ஒப்புக் கொண்டதாக காவல்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.  மேலும் இந்த கொலை குறித்து காவல்துறையினரிடம்  பாலசுந்தர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தது, நான் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்து வந்தேன். இந்நிலையில் எனக்கு வேலை பார்க்க பிடிக்காததால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்து எனது அப்பா, அம்மாவுடன் இருந்தேன். அப்போது எனது பெற்றோர் இருவரும் என்மீது அக்கறை கொள்ளாமல் என்னிடம் சரிவரப் பேசாமல் இருந்தனர். இதனால் எனது பெற்றோர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களிடம் நான் அடிக்கடி சண்டை போடுவேன் என்றார்.
 

என் மீது அக்கறை காட்டதால் தாயையும் தந்தையும் அடித்து கொன்றேன் - மகனின் வாக்குமூலத்தால் பரபரப்பு
 
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் எனக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்து ஒரு பூசாரியை எங்கள் வீட்டிற்கு வர சொல்லி இருந்தனர். இதனால் மேலும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அதனால் எனது அப்பா அம்மாவை கொலை செய்ய முடிவு செய்தேன்.  நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்த என் அம்மா வள்ளி தலையின் பின்புறம் ஒரு கட்டையால் அடித்தேன். அதனால் அவர் கீழே சாய்ந்தார். அப்போது அதே கூர்மையான கட்டையால் அவரது கழுத்தில் குத்தி கிழித்தேன். இதை தொடர்ந்து எங்களது வீட்டின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த எனது அப்பாவை வீட்டிற்கு கூட்டி வந்து அவரையும் அதே இடத்தில் வைத்து தலையின் பின்புறத்தில் கட்டையால் அடித்தும் கழுத்தில் குத்தியும் கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து பாலசுந்தரை கைது செய்த மண்டையூர் காவல்துறை அவரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget