மேலும் அறிய

என் மீது அக்கறை காட்டதால் தாயையும் தந்தையும் அடித்து கொன்றேன் - மகனின் வாக்குமூலத்தால் பரபரப்பு

என் மீது அக்கறை கொள்ளாததால் தந்தை, தாய் ஆகியோரை அடித்து கொன்ற மகன் பாலசுந்தரை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவூர் அருகே உள்ள மண்டையூர் நாட்ரியன்காடு பகுதியை சேர்ந்த விவசாயி ரெங்கசாமி (60), இவரது மனைவி வள்ளி (57). இவர்களுக்கு பாலசுந்தர் (27), கோபி, சங்கீதா என்ற 3 பிள்ளைகள் உள்ளனர். கேட்டரிங் படிப்பு முடித்துள்ள பாலசுந்தர் வெளியூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் எங்கும் வேலைக்கு செல்லாமல்  யாரிடமும் சரியாக பேசாமல் மனநலம் பாதிக்கப்பட்டது போல பிரமை பிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்து வந்துள்ளார். பாலசுந்தருக்கும், பெற்றோருக்கும் அடிக்கடி சண்டைகள் வந்த நிலையில்  பாலசுந்தருக்கு முனி பிடித்துள்ளதால் தான் இவ்வாறு இருப்பதாக நினைத்து ரெங்கசாமி பாலசுந்தருக்கு ஒரு உடுக்கை பூசாரி மூலம் முனியை விரட்டுவதற்கு ஏற்பாடு செய்து, அவரது வீட்டிற்கு பூசாரியை வரவழைத்திருந்தார். இந்த தகவல் பாலசுந்தருக்கு தெரியவரவே அவரது தாய் தந்தையிடம் இதுகுறித்துகேட்டு தகராறு செய்தாக கூறப்படுகிறது.
 

என் மீது அக்கறை காட்டதால் தாயையும் தந்தையும் அடித்து கொன்றேன் - மகனின் வாக்குமூலத்தால் பரபரப்பு
 
இந்நிலையில் நேற்று முன்தினம் ரெங்கசாமி வீட்டிற்கு பால் கறக்க வந்த பால்காரர், ரெங்கசாமி மற்றும் வள்ளி ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அருகில் உள்ளவர்கள் மூலம் காவல்துறைக்கு  தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாத்தூர், மண்டையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து, பாலசுந்தரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். காவல்துறையின் தீவிர விசாரணையில் பெற்றோரை தான் கட்டையால் அடித்தும், குத்தியும் கொலை செய்ததை பாலசுந்தர் ஒப்புக் கொண்டதாக காவல்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.  மேலும் இந்த கொலை குறித்து காவல்துறையினரிடம்  பாலசுந்தர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தது, நான் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்து வந்தேன். இந்நிலையில் எனக்கு வேலை பார்க்க பிடிக்காததால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்து எனது அப்பா, அம்மாவுடன் இருந்தேன். அப்போது எனது பெற்றோர் இருவரும் என்மீது அக்கறை கொள்ளாமல் என்னிடம் சரிவரப் பேசாமல் இருந்தனர். இதனால் எனது பெற்றோர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களிடம் நான் அடிக்கடி சண்டை போடுவேன் என்றார்.
 

என் மீது அக்கறை காட்டதால் தாயையும் தந்தையும் அடித்து கொன்றேன் - மகனின் வாக்குமூலத்தால் பரபரப்பு
 
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் எனக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்து ஒரு பூசாரியை எங்கள் வீட்டிற்கு வர சொல்லி இருந்தனர். இதனால் மேலும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அதனால் எனது அப்பா அம்மாவை கொலை செய்ய முடிவு செய்தேன்.  நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்த என் அம்மா வள்ளி தலையின் பின்புறம் ஒரு கட்டையால் அடித்தேன். அதனால் அவர் கீழே சாய்ந்தார். அப்போது அதே கூர்மையான கட்டையால் அவரது கழுத்தில் குத்தி கிழித்தேன். இதை தொடர்ந்து எங்களது வீட்டின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த எனது அப்பாவை வீட்டிற்கு கூட்டி வந்து அவரையும் அதே இடத்தில் வைத்து தலையின் பின்புறத்தில் கட்டையால் அடித்தும் கழுத்தில் குத்தியும் கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து பாலசுந்தரை கைது செய்த மண்டையூர் காவல்துறை அவரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
PM Modi: அள்ளிக் கொடுத்த மோடி - ரூ.4,850 கோடி கடன், 72 கனரக பாதுகாப்பு வாகனங்கள், குறுக்கே வந்த சீனா?
PM Modi: அள்ளிக் கொடுத்த மோடி - ரூ.4,850 கோடி கடன், 72 கனரக பாதுகாப்பு வாகனங்கள், குறுக்கே வந்த சீனா?
Mettur dam : 4வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை ! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Mettur dam : 4வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை ! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
TN weather Reoprt: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை நிலவரம்
TN weather Reoprt: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை நிலவரம்
Embed widget