மேலும் அறிய

திருச்சி அருகே அரசு பேருந்து - லாரி மீது மோதி விபத்து - 20 பேர் காயம்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே மணல் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது - இதில் 20 க்கும் மேற்பட்டோர் காயம்.

திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். 

இந்நிலையில் சிறுகனூர் அருகே பேருந்து சென்றுக்கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக , முன்னே சென்று கொண்டு இருந்த மணல் லாரி மீது திடீரென பேருந்து வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மேலும் பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. 

அரசு பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் விபத்து குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் விரைந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தடைந்தனர். பின்பு பேருந்தில் சிக்கி தவித்த பயணிகளை அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். 

நள்ளிரவில் அரசு பேருந்து மணல் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.


திருச்சி அருகே அரசு பேருந்து - லாரி மீது மோதி விபத்து - 20 பேர் காயம்

மேலும் இது குறித்து அப்பகுதி மக்களிடையே கேட்டபோது அவர்கள் கூறியது என்னவெனில், “திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக திருச்சி அருகே சிறுகனூர், பாடாலூர் பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மிக அதிக வேகமாக செல்கிறது. அதேசமயம் பொதுமக்கள் சாலைகளை கடக்க வேண்டும் என்றாலே ஒரு அச்சத்துடன் கடப்பதாக தெரிவித்தனர். 

குறிப்பாக இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடைபெறுகிறது. சில சமயங்களில் உயிர் இழப்புகள் அதிகமாக நடந்துள்ளது. ஆகையால் வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். 

மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்காக நடவடிக்கை வேண்டும். குறிப்பாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இரவு,பகலாக நேரமில்லாமல் , ஓய்வெடுக்காமல் பேருந்து இயக்கி வருகிறார்கள். இதனால் சில சமயங்களில் பேருந்துகள், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது. ஆகையால் இவற்றை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi New CM: டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் ஆம் ஆத்மியின் அதிஷி!
Delhi New CM: டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் ஆம் ஆத்மியின் அதிஷி!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Breaking News LIVE: தமிழக வெற்றிக்கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம்
Breaking News LIVE: தமிழக வெற்றிக்கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம்
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi New CM: டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் ஆம் ஆத்மியின் அதிஷி!
Delhi New CM: டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் ஆம் ஆத்மியின் அதிஷி!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Breaking News LIVE: தமிழக வெற்றிக்கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம்
Breaking News LIVE: தமிழக வெற்றிக்கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம்
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
MNM Kamal Haasan: ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு.. கண் தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு.. அடடே!
இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு.. கண் தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு.. அடடே!
இன்று இலங்கை தேர்தல்; நேற்றே குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பறந்த அதிபர் வேட்பாளர் நமல் ராஜபக்ச?
இன்று இலங்கை தேர்தல்; நேற்றே குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பறந்த அதிபர் வேட்பாளர் நமல் ராஜபக்ச?
TVK Vijay Maanadu: தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
Embed widget