மேலும் அறிய

திருச்சி : மாணவி கூட்டு பலாத்காரம்: காதலன் உள்பட 5 பேர் மீது எஸ்பியிடம் புகார்..

திருச்சி மாவட்டத்தில் மாணவியை காதலிப்பதாக கூறி, காதலன் தனது நண்பர்களுடன் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த சில ஆட்களாக பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு NIT கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்து மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்த நபரை உடனடியாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இதற்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்திற்கு நேரடியாக சென்ற திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு கண்டார்.

மேலும் பெண்கள் ரீதியில் காப்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்து மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டார்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் பாலியல் சீண்டல்  தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக அனைத்து நிறுவனங்களும் குழுக்கள் அமைக்க வேண்டும்,  அமைக்காவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி மாநகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. இதனை விசாரணை செய்த போலீசார் உடனடியாக பள்ளியின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


திருச்சி : மாணவி கூட்டு பலாத்காரம்: காதலன் உள்பட 5 பேர் மீது எஸ்பியிடம் புகார்..

திருச்சி அருகே மாணவி கூட்டு பலாத்காரம் 

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவியை சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சிலம்பு என்ற சிலம்பரசன் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவரை காதலிப்பதாக கூறி கடந்த (13.04.2024) தேதி உன்னிடம் தனியாக பேச வேண்டும் என இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று டோல்கேட் மாருதி நகர் பகுதியில் உள்ள நண்பர்கள் வீட்டில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் காதலன் சிலம்பரசனுடன் இருந்த 5 நண்பர்களும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

பின்னர் அதனை வீடியோவாக எடுத்து வைத்து அந்த மாணவியை மிரட்டி பலமுறை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பம் ஆகி உள்ளார். கர்ப்பமான மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து கருக்கலைப்பு செய்த நிலையில், தற்போது மீண்டும் அந்த மாணவியை நாங்கள் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் இல்லையென்றால் உனது வீடியோவை அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என அந்த மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் தற்பொழுது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தாயாருடன் வந்த மாணவியின் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் மனு அளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவி. கூறுகையில்.. நான் கல்லூரி படித்துவிட்டு சனி, ஞாயிறு மட்டும் வீட்டுக்கு வருவேன், அப்போது என்னை வந்து சந்தித்து என்னோடு பேசி பழகினான். பின்னர் ஒரு நாள் என்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவனும் அவனுடைய நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து என் வாழ்க்கையை வீணாக்கி விட்டனர். அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறான் என்றார்.

மேலும் அவன் அமைச்சர் மகேஸ் இடம் ஓட்டுனராக பணிபுரிவதாக என்னிடம் பொய் கூறி பழகினான் என பாதிக்கப்பட்ட மாணவி கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Group 4 : “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குருப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
Group 4 : “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குருப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
Gold Price: பாமர மக்கள் ஷாக், ராக்கெட் வேகத்தில் எகிறப்போகும் தங்கம் விலை, அமெரிக்கா போட்ட குண்டு..!
Gold Price: பாமர மக்கள் ஷாக், ராக்கெட் வேகத்தில் எகிறப்போகும் தங்கம் விலை, அமெரிக்கா போட்ட குண்டு..!
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்
Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS | அடுத்தடுத்த ENCOUNTER நடுங்கும் ரவுடிகள்..அலறவிட்ட அருண் IPSRowdy Kakkathoppu Balaji Profile | டீனேஜில் தடம் மாறிய சிறுவன்..வட சென்னை DON-ஆன கதை!Chennai Rowdy kakkathoppu balaji encounter | ரவுடி பாலாஜி ENCOUNTER! சாட்டையை சுழற்றும் அருண்!Vijay on DMK, ADMK | திமுக எதிரி!அதிமுக குறி! விஜய் மாஸ்டர் ப்ளான்! பெரியார் அரசியல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 4 : “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குருப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
Group 4 : “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குருப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
Gold Price: பாமர மக்கள் ஷாக், ராக்கெட் வேகத்தில் எகிறப்போகும் தங்கம் விலை, அமெரிக்கா போட்ட குண்டு..!
Gold Price: பாமர மக்கள் ஷாக், ராக்கெட் வேகத்தில் எகிறப்போகும் தங்கம் விலை, அமெரிக்கா போட்ட குண்டு..!
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்
Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்
Breaking News LIVE 19 Sep: அடுத்தடுத்து வெடித்து சிதறிய வாக்கி-டாக்கீஸ் - தாக்குதல் நடத்துவது யார்?
Breaking News LIVE 19 Sep: அடுத்தடுத்து வெடித்து சிதறிய வாக்கி-டாக்கீஸ் - தாக்குதல் நடத்துவது யார்?
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள்  கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள் கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Images: விண்வெளி நிலையத்தை அமைக்க போகும் இந்தியா...எப்படி இருக்கும் தெரியுமா..!
விண்வெளி நிலையத்தை அமைக்க போகும் இந்தியா...எப்படி இருக்கும் தெரியுமா..!
Monkeypox:  கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி.! தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை தீவிரம்
Monkeypox: கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி.! தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை தீவிரம்
Embed widget