மேலும் அறிய

Trichy : ”திருச்சி இளைஞர்களே ; வாய்ப்பு உங்களுக்குதான்” வருகிறது IT நிறுவனம்..!

'திருச்சிக்கு புதுபுதுப்பு வெளிநாட்டு ஐ.டி நிறுவனங்கள் வருவதால் வேலை வாய்ப்புகள் பெருகவுள்ளன”

திருச்சி: உலக அளவில் ஐடி துறையில் முக்கிய நிறுவனமாக உள்ள அக்சென்ச்சர் நிறுவனத்தின் பார்வை திருச்சி பக்கம் திரும்பி உள்ளது. இதனால் திருச்சி பகுதி வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட அக்சென்ச்சர் நிறுவனம், உலக அளவில் ஐடி துறைக்கு ஒரு முக்கியமான நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம், டிஜிட்டல் சேவைகள் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. தற்போது இந்நிறுவனம் திருச்சியில் புதிய கிளை திறக்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் திருச்சியின் வளர்ச்சிக்கு இது மற்றொரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமா? திருச்சி பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருச்சி வாலிபர் செம குஷியில் உள்ளனர்.

அக்சென்ச்சர் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. பல இளைஞர்களின் கனவு, ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்வது தான். அந்த வகையில், அக்சென்ச்சர் பலருக்கும் ஒரு முக்கியமான நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் இந்தியா உட்பட பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அக்சென்ச்சரின் வருவாய் அறிக்கை, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. ஏனெனில், பல இந்திய நிறுவனங்கள் சேவை ஏற்றுமதியை நம்பியே உள்ளன.

அக்சென்ச்சர் டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனலிட்டிக்ஸ், மொபிலிட்டி, சாப்ட்வேர் டெக்னாலஜி, கிளவுட் சர்வீசஸ் போன்ற பல சேவைகளை வழங்குகிறது. இது டிஜிட்டல், கிளவுட் மற்றும் பாதுகாப்பில் சிறந்த திறன்களைக் கொண்ட ஒரு உலகளாவிய நிறுவனமாகும். ஏஐ, கிளவுட், டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் மாற்றங்களை உருவாக்குகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, புனே, கொல்கத்தா, புவனேஸ்வர், ஜெய்ப்பூர், இந்தூர், குர்கிராம் போன்ற நகரங்களில் இதன் கிளைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் ஏற்கனவே அக்சென்ச்சர் கிளைகள் உள்ளன. தற்போது திருச்சியில் புதிய கிளை திறக்கப்பட உள்ளது என்ற தகவல்தான் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அக்சென்ச்சர் நிறுவனத்தின் வருகை திருச்சியின் வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். இது, "நகரத்தை வலிமையாக உலக வரைபடத்தில் பதித்து, எதிர்கால வேகமான வளர்ச்சிக்கான இலக்காக மாற்றும் நடவடிக்கையாக எதிர்பார்க்கப்படுகிறது". பெரிய நகரங்களில் மட்டுமல்லாமல், சிறிய நகரங்களிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை தமிழகம் நிரூபித்து வருகிறது. இந்த நிறுவனம் திருச்சியில் திறக்கப்படுவதால், இப்பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐடி பார்க் வர போகிறது. புட் கோர்ட் வருகிறது. அதனுடன் தற்போது வெளிநாட்டு ஐடி நிறுவனமான அக்சென்ச்சர் திருச்சியில் தன் கிளையை தொடங்குவது இப்பகுதியில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதால் திருச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கம்ப்யூட்டர் படிப்பு முடித்து ஐதராபாத், பெங்களூர், சென்னை என்று வேலை தேடி அலையும் நிலை இனி மாறிவிடும். உள்ளூரிலேயே பணி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பெற்றோர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Crime: மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
AB PM-JAY Scheme: 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
பொறியியல், ஆர்ட்ஸ் படிப்புகளுக்கு மவுசு அதிகரிப்பு; குவியும் விண்ணப்பங்கள்!- எவ்ளோ தெரியுமா?
பொறியியல், ஆர்ட்ஸ் படிப்புகளுக்கு மவுசு அதிகரிப்பு; குவியும் விண்ணப்பங்கள்!- எவ்ளோ தெரியுமா?
Embed widget