மேலும் அறிய

Corona | டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 நாட்களில் அதிகரிக்கும் கொரானா!

திருச்சி ,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இவற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு.

தமிழக முழுவதும் கொரானா தொற்றின் இரண்டாவது அலையின் தொடக்கத்தில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதே சமயம் இறப்பு விகிதமும் அதிகரித்தது. தொற்றின் பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பித்தது மாநில அரசு. தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை குறையும் போது மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவ்வப்போது சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தப்பட்டது. அதே சமயம் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களை தீவிரமாக கண்காணிப்பு மேற்கொள்ளபட்டது. மேலும் கொரானா தொற்று ஏற்படாமல் தவிர்க்க மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவித்தது. அதன்படி மாநில முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 2 கோடி பேர்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தியதில் தமிழ்நாடு முன் மாநிலமாக இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரானா மூன்றாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது , சமூக இடைவெளியை பின்பற்றுவது, அரசு கூறிய விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Corona | டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 நாட்களில் அதிகரிக்கும் கொரானா!

டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர் ,அரியலூர், ஆகிய பகுதிகளில் தொற்றின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரானா இரண்டாவது அலையின் போது திருச்சி, தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய பகுதிகளில் பாதித்தவர்களின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் அதிகரித்தது. மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கபட்ட நடவடிக்கைகள் மூலம் கடந்த இரண்டு மாதங்களாக பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது  கடந்த 5 நாட்களில் தொற்றின் எண்ணிக்கையும், இறப்பும் , சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளது. 


Corona | டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 நாட்களில் அதிகரிக்கும் கொரானா!

டெல்டா மாவட்டங்களில் இதுவரை கொரானா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை

 திருச்சி - பாதித்தவர்கள் 72,344 பேர்களும், குணமடைந்தவர்கள்  70,597 பேர்களும், இறந்தவர்கள் 962 பேர்களும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் 785 பேர்களும் , புதுக்கோட்டை,  பாதித்தவர்கள் 28,110 பேர்களும், குணமடைந்தவர்கள் 27,382 பேர்களும், இறந்தவர்கள் 364 பேர்களும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் 364 பேர்களும் , தஞ்சாவூர், பாதித்தவர்கள் 67,742 பேர்களும், குணமடைந்தவர்கள் 65,733 பேர்களும், இறந்தவர்கள் 847 பேர்களும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் 1162 பேர்களும் , திருவாரூர், பாதித்தவர்கள் 37,769 பேர்களும், குணமடைந்தவர்கள் 37,081 பேர்களும், இறந்தவர்கள் 367 பேர்களும், சிகிச்சை பெற்றுவருபவர்கள்  321 பேர்களும் , நாகைப்பட்டினம், பாதித்தவர்கள், 18,635 பேர்களும், குணமடைந்தவர்கள், 17,961 பேர்களும், இறந்தவர்கள் 289 பேர்களும், சிகிச்சை பெற்றுவருபவர்கள்  385 பேர்களும், பெரம்பலூர், பாதித்தவர்கள் 11,469 பேர்களும், குணமடைந்தவர்கள் 11,114 பேர்களும், இறந்தவர்கள் 221 பேர்களும், சிகிச்சை பெற்றுவருபவர்கள்  134 பேர்களும் , அரியலூர், பாதித்தவர்கள் 15,751 பேர்களும், குணமடைந்தவர்கள் 15,294 பேர்களும், இறந்தவர்கள் 236 பேர்களும், சிகிச்சை பெற்றுவருபவர்கள்  221 பேர்களும் உள்ளனர் , என்பது குறிப்பிடத்தக்கது. 


Corona | டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 நாட்களில் அதிகரிக்கும் கொரானா!

சென்னையில் கொரானா தொற்று கடந்த ஒருவாரகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கபட்டுள்ளது. குறிப்பாக  மக்கள் அதிகமாக கூடும்  ஒன்பது இடங்களில்  உள்ள கடைகள் திறக்க தடை விதித்தது சென்னை மாநகராட்சி. இதனை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகும் இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை டெல்டா மாவட்டங்களில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 870 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 162 பேர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 3,372 பேர் அதேசமயம் இது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 3,286 பேர்கள் குறிப்பிடத்தக்கது. மேலும் கொரானா தொற்றின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கபட வாய்ப்புகள் உள்ளதாக உலக பொது சுகாதார துறை தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும், தடுப்பூசிகளை மறக்காமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget