மேலும் அறிய

கனடாவில் இருந்து திருச்சி திரும்பிய குழந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

கனடாவில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு வந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று  சில தினங்களாக மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. டெல்லி, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் சென்னை ஐ.ஐ.டி.யில் 30 மேற்படோர்களுக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதையடுத்து பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை மீண்டும் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கனடாவில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு வந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி ராமலிங்க நகரை சேர்ந்த 3 பேர் கடந்த 12ஆம் தேதி கனடா நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் மறுநாள் கும்பகோணத்தில் உள்ள உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


கனடாவில் இருந்து திருச்சி திரும்பிய குழந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

அதன் பின்னர் திருச்சி திரும்பிய அவர்கள் கடந்த 15ஆம் தேதி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறையெடுத்து தங்கினர். அதைதொடர்ந்து 19ஆம் தேதி கொரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தியுள்ளனர். இதில் குழந்தை உள்பட 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஓட்டலில் கிருமிநாசி மூலம் சுத்தப்படுத்தினர். பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் லேசான நோய் அறிகுறி மட்டுமே இருந்த காரணத்தால் ராமலிங்க நகரில் உள்ள உறவினர் வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளனர். இதுபற்றி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறும்போது, திருச்சி மாநகர மக்கள் அச்சப்பட தேவையில்லை. நாங்கள் 18 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக தினமும் கொரோனா பரிசோதனைக்கு ரத்த, சளி மாதிரிகள் சேகரித்து வருகிறோம். நேற்றைய தினம் கூட  திருச்சியில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றனர்.


கனடாவில் இருந்து திருச்சி திரும்பிய குழந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

இதனை தொடர்ந்து  வட மாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் இருப்பதால் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். இப்போது பெரும்பாலான மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதில்லை. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நோய் தொற்றில் இருந்து தங்களை தங்களையும், சமூகத்தையும் பாதுகாக்க உதவிட வேண்டும் என்றனர்.குறிப்பாக பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருநாசினியை கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது, கூட்டம் கூடுவதை தவிர்பது, போன்ற அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Embed widget