மேலும் அறிய

காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி..விஷம் கொடுத்து கொன்ற கொடூரம்..

திருச்சி மாவட்டத்தில் காதலிக்க மறுத்ததால் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புத்தூரை சேர்ந்தவர் மாணவி வித்யாலட்சுமி 19 வயது, இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் இவர் பாய்லர் ஆலை பகுதியில் மணியம்மை நகரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிக்கு தினமும் சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் சாப்பிட்ட உணவில் விஷம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில், பாய்லர் ஆலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பாய்லர் ஆலை காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று, அந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர். இதில் அந்த மாணவி காவல்துறை அதிகாரிகளிடம்  கூறுகையில், கடந்த ஒரு மாதமாக தன்னை ஒருவன் பின்தொடர்ந்து வந்ததாகவும், கடந்த 11-ந் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, அந்த நபர் தன்னிடம் காதலிப்பதாக கூறியதாகவும், இதனால் அவரை தான் செருப்பால் அடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 12-ந் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, தன்னை காதலிப்பதாக கூறிய நபர் உள்பட 3 வாலிபர்கள் சேர்ந்து தன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அருகில் உள்ள ஒரு சந்தில் வைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து குடிக்க செய்ததாகவும் கூறியுள்ளார்.


காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி..விஷம் கொடுத்து கொன்ற கொடூரம்..

இதனால்  பாதிக்கப்பட்ட அவர் கடந்த 13-ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், பின்னர் வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு அதிகமானதால் கடந்த 17-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும், அந்த மாணவி வாக்குமூலத்தில் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பாய்லர் ஆலை காவல்துறையினர் வழக்குப்பதிந்து 3 பேரை தேடி வந்த நிலையில், ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த மாணவி தனியார் மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி..விஷம் கொடுத்து கொன்ற கொடூரம்..

இந்நிலையில் மாணவியின் இறப்புக்கு காரணமான மூன்று நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பெல் காவல்துறையை கண்டித்து திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மலைக்கோவில் பகுதியில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள்  சம்பவ இடத்திற்கு வந்து  போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எங்களது மகளின் இறப்பிற்கு காரணமான 3 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், இல்லை என்றால் அதுவரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் என கூறி தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர்  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆகையால் போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Election Manifesto: திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
மழைநீர் சேமிப்பு: தண்ணீர் பஞ்சத்தை விரட்டும் தீர்வு! காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தகவல் | விவசாயிகள் கவனத்திற்கு
மழைநீர் சேமிப்பு: தண்ணீர் பஞ்சத்தை விரட்டும் தீர்வு! காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தகவல் | விவசாயிகள் கவனத்திற்கு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
Embed widget