மேலும் அறிய

திருச்சியில் நடந்த போராட்டத்தில் பா.ஜ.க.- போலீசார் இடையே மோதல்

திருச்சி புத்தூர் நால்ரோட்டில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நடன கேளிக்கை விடுதிக்கு அனுமதி அளிக்கப்பட்தை ரத்து செய்ய கோரியும், தமிழக அரசை கண்டித்தும் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் போராட்டம்.

திருச்சி புத்தூர் நால்ரோட்டில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நடன கேளிக்கை விடுதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அனுமதியை ரத்து செய்ய கோரியும், தமிழக அரசை கண்டித்தும் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் புத்தூர் நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் பா.ஜ.க.வினர் அங்கு திரண்டனர். அப்போது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை என்றும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்றும் கூறினர். இதையடுத்து பா.ஜ.க.வினர் புத்தூர் நால்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் இழுத்து சென்று கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். இதனால் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தள்ளு முள்ளாக மாறியது. அப்போது காவல்துறையை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் பா.ஜ.க.வினர் கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் பெண்கள் உள்பட 61 பேர் கைது செய்யப்பட்டனர்.


திருச்சியில் நடந்த போராட்டத்தில் பா.ஜ.க.- போலீசார் இடையே மோதல்

இதற்கிடையே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக விமர்சித்ததாக கூறி தி.மு.க. வட்ட செயலாளர் பவுல்ராஜ் தலைமையில் அரசு மருத்துவமனை அருகே தி.மு.க.வினரும் திரண்டனர். அவர்கள் பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து தி.மு.க.வினர் உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து சென்றனர். இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக கூடுதல், கலகம் செய்வதற்கு தூண்டிவிடுதல், முறையற்று தடுத்தல், வாட்ஸ் அப், முகநூல் போன்ற ஊடகத்தின் வழியாக வதந்திகளை பரப்புதல், அதன்மூலம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் பா.ஜ.க.வினர் மீது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்பட 9 பேரை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் புத்தூர் பகுதியில் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


திருச்சியில் நடந்த போராட்டத்தில் பா.ஜ.க.- போலீசார் இடையே மோதல்

இதற்கிைடயே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பா.ஜ.க.வினர் தங்க வைக்கப்பட்டு இருந்த மண்டபத்துக்கு நேற்று இரவு வருகை தந்தார். இதனால் மண்டபத்துக்கு வெளியே ஏராளமான பா.ஜ.க.வினர் திரண்டு இருந்தனர். பின்னர், கருப்பு முருகானந்தம் நிருபர்களிடம் கூறுகையில், "மாணவர்கள் நலனுக்காக பா.ஜ.க. தெருவில் இறங்கி போராடி வருகிறது. போராட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் கோஷம் எழுப்பிய லட்சுமிநாராயணன் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கல்லூரியின் அருகே மதுக்கூடத்துடன் நடனமாடும் விடுதியை திறக்க ஆளும் கட்சி ஆதரவாளர்கள் துடிக்கின்றனர். அவ்வாறு அமைந்தால் மாணவர்கள் நலன் நிச்சயம் பாதிக்கப்படும். ஆனால் இந்த விவகாரத்தில் போலீசார், மதுக்கூடம் திறப்பதை தடுப்பதை விட்டு, ஒருதலைபட்சமாக செயல்பட்டு பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்தது" என்றார்.

தலைப்பு செய்திகள்

திருச்சி பெண்களே ரெடியா? ரூ.5,000 பரிசுடன் விழிப்புணர்வு மாரத்தான்! என்னைக்கு தெரியுங்களா?
திருச்சி பெண்களே ரெடியா? ரூ.5,000 பரிசுடன் விழிப்புணர்வு மாரத்தான்! என்னைக்கு தெரியுங்களா?
திருச்சியில்ஷாக் கொடுக்கும் கோழி இறைச்சி விலை... ஒரே வாரத்தில் ரூ.30 உயர்வு: அசைவ பிரியர்கள் கவலை
திருச்சியில்ஷாக் கொடுக்கும் கோழி இறைச்சி விலை... ஒரே வாரத்தில் ரூ.30 உயர்வு: அசைவ பிரியர்கள் கவலை
திருட்டு அச்சம் அதிகரிப்பு... ராக்கின்ஸ் சாலையில் உடனடியாக தெருவிளக்குகளை சீரமைக்க கோரிக்கை
திருட்டு அச்சம் அதிகரிப்பு... ராக்கின்ஸ் சாலையில் உடனடியாக தெருவிளக்குகளை சீரமைக்க கோரிக்கை
Trichy power cut: திருச்சியில் (07-07-2026) நாளை முழு நேர பவர் கட் இடங்களின் லிஸ்ட் வந்தாச்சு - செக் பண்ணிக்கோங்க
திருச்சியில் (07-07-2026) நாளை முழு நேர பவர் கட் இடங்களின் லிஸ்ட் வந்தாச்சு - செக் பண்ணிக்கோங்க

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
’வாரியத் தலைவர் பதவியை பெறுவதில் போட்டா, போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
’வாரியத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
Embed widget