மேலும் அறிய

பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் - திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவுரை

திருச்சி மாநகரில் குப்பைகளை துப்புரவு பணியாளர்களிடம் , பொதுமக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி மாநகரில் சுகாதாரம் மற்றும் தூய்மையை பராமரிக்கும் வகையிலும், குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல் இருப்பதற்காகவும் மாநகராட்சி தரப்பில் பல்வேறு தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை தரம்பிரித்து வாங்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தபோதிலும் மாநகரில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதால் குப்பைகைளை தரம்பிரிக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுவதால் மீண்டும் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் கால தாமதாமதம் ஏற்படுகிறது. பொது மக்கள் குப்பைகளை தரம்பிரித்து சரியாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்தால் இன்னும் அதிகமாக மாநகரை தூய்மையாக வைத்து கொள்ள முடியும் என்பதே ஒட்டுமொத்த திருச்சி மக்களின் எதிர்பார்ப்பு. அதற்கான முயற்சிகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கூறியதாவது: திருச்சி மாநகரை பொருத்தமட்டில் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் பொது இடங்களில் குப்பைகைளை கொட்டாமல் இருப்பதற்காக மாநகராட்சி ஊழியர்களை கொண்டு அந்த இடங்களில் கோலம் வரைதல் உள்ளிட்ட விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் - திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவுரை

இந்நிலையில், இன்று காலை வெக்காளியம்மன் கோவில், இப்ராகிம் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இருபுறமும் சில இடங்களில் குப்பகைளை பொதுமக்கள் கொட்டி வைக்கும் நிலை இருந்தது. அதை நீக்கும் வகையில் சுவற்றில் இருபுறமும் வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றது. குறிப்பாக பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து தர மறுக்கிறார்கள். 30 சதவீதத்திற்கும் கீழ் உள்ளவர்கள் தான் குப்பைகளை தரம்பிரித்து வழங்குகிறார்கள். மற்றவர்கள் அப்படியே மாநகராட்சி ஊழியர்களிடம் கொடுக்கிறார்கள். இதனால் தொடர்ந்து அதை தரம்பிரிக்க நேரம் அதிகமாகி விடுகிறது. குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என்பது சட்டம். பொது மக்கள் அதை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றார். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே சுற்றுசூழலை பாதுகாக்க முடியும் , அவ்வாறு பாதுகாத்தால் வருங்காலத்தில் நோய் தொற்று பரவாமலும், சுத்தமான காற்றை சுவாசித்து அனைவரும் ஆரோக்கியமான இருக்கலாம் என திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மக்களுக்கு அறிவுரை கூறினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை
திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget