மேலும் அறிய

ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை - அமைச்சர் எல்.முருகன்

பிரதமர் அளித்த வாக்குறுதிப்படி ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கப்படும் என்று திருச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு மத்திய அரசு சார்பில் வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் பிரதம மந்திரி ரோஜ்கார் மேளா திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 3-ம் கட்டமாக 71 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா டெல்லியில்  நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்தநிகழ்ச்சி நாடு முழுவதும் 45 இடங்களில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 129 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு ரெயில்வே, சுங்கத்துறை, கலால்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதல்கட்டமாக 25 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியது.. 


ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை -  அமைச்சர் எல்.முருகன்
 
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றியபோது, இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி 75 ஆயிரம் பேருக்கும், அதன்பின்னர் நவம்பர் மாதம் 22-ந் தேதி 71 ஆயிரம் பேருக்கும் பிரதமர் நரேந்திரமோடி வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து இன்றைய தினம் 3-வது கட்டமாக நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் பணி ஆணைகளை வழங்கியுள்ளார். அதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் புதிதாக பணியில் சேரும் 1½ லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் முகாமை பிரதமர் தொடங்கி வைத்தார். தற்போது புதிதாக வேலையில் சேர்ந்துள்ள இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் தேச முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பார்கள். 2047-ம் ஆண்டில் நாடு மிகப்பெரிய வல்லரசாக திகழவும், சுயசார்புடன் இருக்கவும், புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ள இந்த இளைஞர்கள் பணியாற்ற வேண்டும். மத்திய அரசு வேலை என்றால் எந்த மாநிலத்திலும் சென்று பணியாற்ற முடியும். மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் சுங்கத்துறை முதன்மை ஆணையர் ஜானே நாதனியன் தலைமை தாங்கினார். திருச்சி மண்டல ஆணையர் அணில் வரவேற்றார். இதில் சுங்கம், கலால், வணிக வரித்துறை, ரெயில்வே உள்ளிட்ட பல்வேறுத்துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை ஆணையர் பிரதீப் நன்றி கூறினார்.
 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget