Accident: திருச்சியில் பயங்கரம்.. நடைபாதையில் தூங்கியவர்கள் மீது ஏறிய கார் - 3 பேர் உயிரிழப்பு
திருச்சியில் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 பேர் உயிரிழப்பு:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகேயுள்ள கீதாபுரத்தில் இன்று காலை கார் ஒன்று விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்து கார் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் மீது ஏறியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஆத்திரத்தில் கார் கண்ணாடியை உடைத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் காரின் டயர் வெடித்ததால் இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் காரின் உள்ளே ஓட்டுநர் லட்சுமிநாராயணன், அஸ்வந்த் என இருவர் இருந்ததாகவும், அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















