மேலும் அறிய

சாமி கும்பிட சென்ற சகோதரர்கள் மின்சாரம் பாய்ந்து பலி - திருச்சியில் சோகம்

சில இடங்களில் மின்சாரம் கம்பி சரியாக பொருத்தாமலும், அறுந்த கம்பியை அப்புறப்படுத்தாமலும் அப்படியே போட்டுவிட்டு மின்சார துறை ஊழியர்கள் சென்றுவிடுகிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

திருச்சி மாவட்டத்தில் சாமி கும்பிட சென்றபோது மின்சாரம் பாய்ந்து அண்ணன்- தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அத்தாணி அரிசன தெருவை சேர்ந்தவர் அரவன் (வயது 60). இவரது தம்பி மாரிமுத்து (58). இவர்கள் விவசாயம் செய்து வந்தனர். ஆண்டு தோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வது வழக்கம். இதனை தொடர்ந்து இந்தாண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு தனது குடும்பத்துடன் வயல்வெளி பகுதியான அத்தாணி கிராமத்தில் உள்ள கருப்பு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக அரவன், மாரிமுத்து ஆகியோர் சென்றனர். கோவில் அருகே அவர்கள் நடந்து சென்றபோது அங்குள்ள மின் கம்பத்தின் இணைப்பு கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் சென்று அரவனின் கால் கம்பியின் மீது பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் உயிருக்கு போராடினார். மேலும் அவரது அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து, தனது அண்ணனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவரும் தூக்கி வீசப்பட்டார். 2 பேரின் அலறல் சத்தத்தையும் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். மேலும் இதுகுறித்து மண்ணச்சநல்லூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த மின் ஊழியர்கள் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். மேலும் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.


சாமி கும்பிட சென்ற சகோதரர்கள் மின்சாரம் பாய்ந்து பலி - திருச்சியில் சோகம்

இதையடுத்து 2 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி கும்பிட சென்றபோது மின்சாரம் பாய்ந்து அண்ணன்- தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம் கம்பிகள் பராமரிப்புகாக பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் சில இடங்களில் மின்சாரம் கம்பி சரியாக பொருத்தாமலும், அறுந்த கம்பியை அப்புறப்படுத்தாமலும் அப்படியே போட்டுவிட்டு மின்சார துறை ஊழியர்கள் சென்றுவிடுகிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’  வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’ வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Pak. Downed Indian Jets: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
Modi Vs Congress: “ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Kerala Monsoon Bumper Lottery 2025: அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’  வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’ வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Pak. Downed Indian Jets: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
Modi Vs Congress: “ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Kerala Monsoon Bumper Lottery 2025: அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
Seeman Vs Aadhav Arjuna: அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Embed widget