மேலும் அறிய

நான் அவன் இல்லை பாணி சம்பவம்.. பல பெண்களை ஏமாற்றிய மோசடி - மனைவியால் சிக்கிய பால்ராசு!

பெரம்பலூர் மாவட்டத்தில் நகை, பணத்திற்காக பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பால்ராசு என்பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் பால்ராசு(30). இவரது மனைவி பூவழகி (22). இவர், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 10ம் தேதி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி பால்ராசுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது எனது பெற்றோர் பால்ராசுவுக்கு 3 பவுன் செயின், 2 1/2  பவுன் மோதிரம் மற்றும் வீட்டிற்கு தேவையான சீர் வரிசை கொடுத்தனர். மேலும் 10 பவுன் நகையும், பைக் வாங்குவதற்காக ஒரு லட்சமும் தருவதாக  பெற்றோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருமணமானதில் இருந்தே எனது கணவர் செல்போனில் பல பெண்களுடன் செல்பி எடுத்த போட்டோவை காட்டினார். அவர்கள் யார் என்று கேட்டபோது உன்னை திருமணம் செய்வதற்கு முன்பே நகை பணத்துக்காக பல பெண்களுடன் என் பெயரை மாற்றிச்சொல்லி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறேன் என்றார்.


நான் அவன் இல்லை பாணி சம்பவம்.. பல பெண்களை ஏமாற்றிய மோசடி - மனைவியால் சிக்கிய பால்ராசு!

மேலும் இதையெல்லாம் நீ கண்டு கொள்ளாதே. உன்னை நல்ல முறையில் பார்த்து கொள்கிறேன் எனக்கூறினார். திருமணம் முடிந்து 2மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தினோம். திடீரென என்னை என் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, உங்கள் மகளுடன் நான் குடும்பம் நடத்த  ரூ.3 லட்சம், 10 பவுன் நகையும் தயார் செய்து விட்டு கூப்பிடுங்கள். அழைத்து செல்கிறேன் என கூறிவிட்டு சென்றார். ஆனால் அவரது செல்போன் எண்களுக்கு போன் செய்தால் நான் சென்னையில் வேலை பார்க்கிறேன் பணத்தையும், நகையையும் தயார் செய்தால் உன்னை வந்து அழைத்துச் செல்கிறேன் எனக்கூறி வந்தார். இந்நிலையில் ஒருநாள் காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருந்து எனது கணவரை தேடி எங்கள் வீட்டிற்கு காவல்துறையினர் வந்த போது என்ன நடந்தது ஏன் என் கணவனை தேடி வந்துள்ளீர்கள் என்று கேட்டபோது. காவல்துறையினர் கூறியது உனது கணவர் ஒரு மைனர் பெண்ணுடன் திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக வாழ்ந்துள்ளார்.  எனவே அவரை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து சென்றனர்.


நான் அவன் இல்லை பாணி சம்பவம்.. பல பெண்களை ஏமாற்றிய மோசடி - மனைவியால் சிக்கிய பால்ராசு!

இதனை தொடர்ந்து சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் போனில் என்னிடம், பால்ராசுவுடன் திருமணமாகி 8 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தார். நகை பணத்திற்காக திருமணம் செய்து பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடி பல மோசடிகளை செய்ததோடு, எனது வாழ்க்கையையும் சீரழித்து விட்டார் என பூவழகி  பால்ராசு மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பால்ராசுவை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார், சென்னை சென்று பால்ராசுவை நேற்று கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்தனர். அவர் எத்தனை பெண்களை மோசடி செய்துள்ளார் என தொடர்ந்து காவல்துறையினர் விசாரனையை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget