மேலும் அறிய

அரியலூர் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் அவதி

மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மேலும் தண்ணீர் வசதியும் இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு .

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மீன்சுருட்டி, ஆலத்திபள்ளம், குண்டவெளி, முத்துசேர்வாமடம், காட்டகரம், சொக்கலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் இங்குள்ள அரசு விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்படவில்லை. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் இங்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே தண்ணீர் பற்றாக்குறையை போக்க இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கென்று 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 


அரியலூர் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை -  நோயாளிகள் அவதி

மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில் 3 டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் நோயாளிகள் மாத்திரைகளை சாப்பிட தண்ணீர் வசதி இல்லாததால் அவர்கள் அருகே உள்ள கடைகளுக்கு சென்று மாத்திரைகளை சாப்பிட வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் எந்திரத்தை பொருத்த வேண்டும். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி கொடுக்க வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் நோயாளிகள் இயற்கை உபாதைக்கு செல்ல தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறையால் இங்குள்ள கழிவறைகள் சுகாதாரமற்று காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர். 


அரியலூர் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை -  நோயாளிகள் அவதி

இதனை தொடர்ந்து மீன்சுருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முதியோர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள் நோய்வாய்பட்டால் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் சுமார் 2½ ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை. மேலும், இ.சி.ஜி. கருவி, ரத்த பரிசோதனை செய்யும் கருவி, படுக்கை அறை ஆகியவற்றை கூடுதலாக வழங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர். மேலும் தமிழாடு சுகாதாரதுறை அமைச்சர் மா. சுப்பரமணியன் மருத்துவமனைக்கு தேவையான கட்டுமான, அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களுக்கு தேவையான மருந்துகள் கிடைக்கவும் உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget