மேலும் அறிய

திருச்சி டிஎஸ்பி வீட்டில் 30 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

திருச்சியில் டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். அதேசமயம் லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசுத் துறையில் உயர்பதவியில் இருப்பவர்கள் மற்றும் அரசியல் கட்சி சேர்ந்தவர்கள் தங்களுடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருந்தால், இது தொடர்பான புகார்கள் வரும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு புகார் உண்மை தகவல் என்றால் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 4ஆம் தேதி தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை துணை கண்காணிப்பாளருடன் தொடர்புடைய இரண்டு இடங்களில் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். திருச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு (2) காவல்துறை துணை கண்காணிப்பாளராக முத்தரசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் 80 லட்சத்து 29 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துள்ளார். இது தொடர்பான வழக்கில், முத்தரசனுக்கு தொடர்புடைய வீடுகளில், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையிலான 10 போலீசார் நேற்று முந்தினம்  சோதனை நடத்தினர். திருச்சி செம்பட்டு பகுதியில் முத்தரசன் வாழ்ந்து வரும் வாடகை வீட்டிலும், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள கல்யாணசுந்தரம் நகரில் அவரது தாயாரது வீட்டிலும் இச்சோதனை நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை மற்றும் சொந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.


திருச்சி டிஎஸ்பி வீட்டில் 30 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

அதுபோல திருச்சியில் நடத்தப்பட்ட சோதனையில், அவர் பெயரிலும், அவரது மனைவி பெயரிலும், 22 சொத்துக்கள் வாங்கி இருப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அவரது நண்பர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கியிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து, ஆக மொத்தம் 30 சொத்துக்களுக்கான ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த 10 லாக்கர் சாவிகளையும் கைப்பற்றி, அதில் இருக்கக்கூடிய ஆவணங்கள் மற்றும் நகைகளை மதிப்பிடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget