மேலும் அறிய

திருச்சி: பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை ஊசி விற்பனை: ஒரே நாளில் 8 பேர் கைது

திருச்சி மாநகரில் போதை ஊசி, போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் ஒரே நாளில் 8 பேர்கள் கைது செய்து சிறையில் அடைக்கபட்டனர்.

திருச்சி மாநகரில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கபடுகிறார்கள். அதே சமயம் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. ஆகையால் திருச்சி மாநகரில் கல்லூரிகள், பள்ளிகள், மத்திய பேருந்துநிலைய பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் மாணவர்களுக்கு விற்கப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு காவலர்களுக்கு  கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இதையடுத்து திருச்சி அரியமங்கலம் ரெயில் நகரில் கடந்த சில நாட்களாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலர் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்ததின்பேரில காவல்துறையில் நடவடிக்கை மேற்க்கொண்டனர்.  இதனை தொடர்ந்து அரியமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சூசை ஆரோக்கியராஜும் தனியாக அப்பகுதியில் கண்காணித்து வந்தார்.

இந்தநிலையில் ரயில் நகரை சேர்ந்த முகமது யூசுப் (வயது 46) என்பவர் போதை மாத்திரைகளை மாணவர்களிடம் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த தகவலின்பேரில் காவல்துறையினர் முகமது யூசுப்பை கைது செய்தனர். தொடர்ந்து  அவரிடம் தீவிர விசாரனையை மேற்கொண்டதில்  அவரிடமிருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

 


திருச்சி: பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை ஊசி விற்பனை: ஒரே நாளில் 8 பேர் கைது
மேலும் இதுதொடர்பாக அவரிடம் தொடர்ந்து  நடத்திய விசாரணையில்  போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டால் போதை இருக்கும் என்று கூறி மாணவர்களிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுபோல மேலும் பலர் போதை மாத்திரைகளை விற்பது தெரியவந்தது. விசாரனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, அரியமங்கலம் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் அந்த கும்பல் சிக்கியது. அரசு அனுமதியோ, உரிய அரசு சான்றிதழோ இல்லாமலும், மருத்துவரின் ஆலோசனை கடிதம் இல்லாமலும் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்த ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த அரவிந்த், வடக்கு காட்டூரை சேர்ந்த ஷெப்ரின் ஆகியோரை அரியமங்கலம் பகுதியில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, விற்பனைக்காக வைத்திருந்த 1,250 போதை மாத்திரைகள் மற்றும் 80 போதை மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.


திருச்சி: பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை ஊசி விற்பனை: ஒரே நாளில் 8 பேர் கைது


இதனை தொடர்ந்து கண்டோன்மெண்ட் முடுக்குப்பட்டியை சேர்ந்த நாகராஜ் மற்றும் கார்த்திக்ராஜா, கல்லுக்குழியை சேர்ந்த ஜெயராமன், கோகுல், பிரவீன் ஆகியோரை முடுக்குப்பட்டி பகுதியில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 200 போதை மாத்திரைகளையும் கைப்பற்றினர்.  பின்னர் கைது செய்யபட்ட 8 பேரும் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருள், கஞ்சா, போதை ஊசி , போதை மாத்திரை, ஆகியவற்றை விற்பனை செய்ய கூடாது. இது போன்ற தவறான செயலில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை கடுமையாக எடுக்கபடும் என திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் எச்சரிகை விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
Embed widget