மேலும் அறிய

Trichy: தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு - 4 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் தொழில் போட்டி காரணமாக தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை செய்த 2 ரவுடிகள் உட்பட 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி, வள்ளுவன் நகரை சேர்ந்தவர் பிரபு என்கின்ற பிரபாகரன். இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே அலுவலகம் வைத்து தனியார் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரபாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

வெட்டிக் கொலை:

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைதாகி சிறை சென்ற பிரபாகரன் நிபந்தனை பிணையில் வெளியே வந்தார். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் நேற்று  இரவு 7:00 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள தனது அலுவலகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.  

அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் முகமூடி அணிந்து கொண்டு பிரபாகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டி தள்ளினர். இதில், அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் நான்கு பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுப்பற்றி தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதனை தொடர்ந்து, கொலை நடந்த அலுவலகத்தில் மாநகர காவல் துணை ஆணையர் அன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டது.  இதற்கிடையில் பாமக மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் என்பவருக்கும், இவருக்கும் கார் வாங்க விற்பது தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இவரிடம் கடந்த சனிக்கிழமை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.  மேலும்  மீண்டும் இந்த விசாரணைக்கு ஆஜராகி உள்ள நிலையில், 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் உரிமையாளர் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை மாநகர காவல் துணை ஆணையர் அன்பு கைப்பற்றி விசாரணை நடத்தி வருந்தார்.


Trichy: தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு - 4 பேர் கைது

4 பேர் கைது:

இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியிடபட்ட அறிக்கையில் கூறியது.. 

திருச்சி மாநகர், அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆபீசர்ஸ் காலனியில் உள்ள தனியார் அலுவலகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபு (எ) பிரபாகரன் ஆவார். இவர் ஆம்புலன்ஸ் பிரபு 51/23, த.பெ.சுப்ரமணியன் என்பவர் அலுவலகத்தில் தனியாக அமர்த்திருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரிந்த 3 நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பிரபுவின் அலுவலகத்திற்குள் நுழைந்து பிரபுவின் தலை மற்றும் உடலில் வெட்டி கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனங்களில் தப்பி சென்றுவிட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில், சம்பவம் இடம் சென்று பிரேதத்தை கைப்பற்றி, அரசுமருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பியும், அரசு மருத்துவமனை காவல்நிலைய குற்ற எண் : 1617/23 u/s 449, 302 IPC- விதியின்படி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொள்ளபட்டது.


Trichy: தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு - 4 பேர் கைது

இவ்வழக்கின் குற்றவாளிகளை  விரைந்து கைது செய்திட திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களின் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது. துரிதமாக மேற்க்கொள்ளபட்ட விசாரணையில் மேற்படி பிரபுவிற்கும் அரியமங்கலத்தை சேர்ந்த ரவுடி அப்பு (எ) ஹரி கிருஷ்ணன், 32/23, த/பெ.தங்கவேல் என்பவருக்கும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்கள் வாங்கி விற்கும் தொழில் முறையில் முன்பகை இருந்து வந்ததாகவும், மேலும் சில பெண்கள் சம்மந்தப்பட்ட பகை காரணமாகவும், அப்பு (எ) ஹரி கிருஷ்ணனின் தூண்டுதலின்பேரில் பொன்மலையை சோந்த ரவுடிகள் ரியாஸ்ராஜ்,22/23, த/பெ.மதீஸ், லட்சுமணன்,37/23, த/விஸ்வலிங்கம், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் பைலட் (எ) கல்லணை ராஜேஷ், 28/23, த/ அந்தோணிசாமி, அரியமங்கலத்தை சேர்ந்த அப்துல் கபூர் பஷீர், 29/23, த/பெ.பாஷா ஆகியோர்களுடன் சேர்ந்து கொண்டு மேற்படி கொலை சம்பவத்தை செய்துள்ளார்கள். மேற்கண்ட குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.

இறந்துபோன பிரபு (எ) பிரபாகரன்,  ஆம்புலன்ஸ் பிரபு என்பவர் பயன்படுத்தப்பட்ட கார்கள் மற்றும் விபத்தில் சேதமடைந்த கார்களை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததால், மறைந்த
ராமஜெயம் கொலை வழக்கில் பயன்படுத்தபட்டதாக சந்தேகப்படக்கூடிய Verna கார் தொடர்பாக, பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வரும் பலபேர்களிடம் CBCID SIT காவல்துறையினர் விசாரணை செய்து வந்துள்ளனர். அதுபோல பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் இறந்த போன ஆம்புலன்ஸ் பிரபுவிடம் ஏதாவது துப்பு கிடைக்குமா என்ற கோணத்தில் CBCID SIT காவல்துறையினர் விசாரணை செய்து வந்துள்ளனர். வேறு ஏதும் காரணங்களும் இல்லை என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Embed widget