மேலும் அறிய

திருச்சி மாநகரில் 2 மாதங்களில் 375 ரவுடிகள் சிறையில் அடைப்பு- காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்

’’புகையிலை பொருட்களை விற்பனை செய்த 70 குற்றவாளிகளை கைது செய்து, 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்’’

திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றதில் இருந்து திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம், அதனை தடுக்கும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். காவல் ஆணையர் மேலான உத்தரவின்பேரில், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் ரவுடிகள், சட்டவிரோத கஞ்சா விற்பனை, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்தை சரிசெய்யவும் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.


திருச்சி மாநகரில் 2 மாதங்களில் 375 ரவுடிகள் சிறையில் அடைப்பு- காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்

அதன்படி, கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்  பொதுமக்களுக்கு இடையூறு செய்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 375 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களிடம் 158 ரவுடிகளை ஆஜர் செய்து குற்ற செயலில் ஈடுபடாத வண்ணம் பிணை பத்திரம் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிணை பத்திரத்தை மீறி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 ரவுடிகள் மீது பிணை முறிவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கும்,பொதுமக்களுக்கும் பங்கம் விளைவித்த 18 ரவுடிகள், திருட்டு மற்றும் வழிப்பறி குற்ற செயல்களில் ஈடுபட்ட 8 குற்றவாளிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த ஒரு குற்றவாளி என 28 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.மேலும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 15 எதிரிகளை கைது செய்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட எதிரிகளை  சிறையிலடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


திருச்சி மாநகரில் 2 மாதங்களில் 375 ரவுடிகள் சிறையில் அடைப்பு- காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்

மேலும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளி  ராஜ்குமார் (எ) வீரப்பன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 70 குற்றவாளிகளை கைது செய்து, 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை சிறையில் அடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 67 குற்றவாளிகளை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் இடையூறு செய்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ரவுடிகள், சட்டவிரோத தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை, தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் மீது சட்டப்படியான, கடுமையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget