மேலும் அறிய

பெரம்பலூரில் ஜல்லிக்கட்டுபோட்டி - காளைகளை அடக்க முயன்ற 33 காளையர்கள் காயம்

பெரம்பலூர் அருகே உள்ள கள்ளப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 33 பேர் காயம் அடைந்தனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ஜல்லிகட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம்  வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டியில்  ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், தகுதியின் அடிப்படையில் 538 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி, கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் அவர்களை எட்டி உதைத்தும், கால்களால் மிதித்தும் ஓடின. மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த ஜல்லிக்கட்டில் 18 மாடுபிடி வீரர்கள் உள்பட 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவக் குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
 

பெரம்பலூரில் ஜல்லிக்கட்டுபோட்டி - காளைகளை அடக்க முயன்ற 33 காளையர்கள் காயம்
 
இதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட வெள்ளைநிற காளை ஒன்று நீண்ட நேரம் களத்தில் இருந்து வெளியேறாமல் அந்த பகுதியிலேயே வட்டமிட்டு நின்று கொண்டது. அப்போது மாடுபிடி வீரர்களும், காளையின் உரிமையாளரும், அவருடன் வந்தவர்களும், முன்கள பணியாளர்களும் நீண்ட நேரம் போராடி அந்த காளையை களத்தில் இருந்து வெளியேற்றினார்கள். இதனால், சிறிது நேரம் ஜல்லிக்கட்டு பாதிக்கப்பட்டது. அதேபோல, காளையின் உரிமையாளர் ஒருவர் தனது காளையை பிடித்த வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் களத்தில் இருந்த வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர். போட்டி நடந்தபோது கடுமையான வெயில் அடித்தது. ஜல்லிகட்டு போட்டியை விழா குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
 

பெரம்பலூரில் ஜல்லிக்கட்டுபோட்டி - காளைகளை அடக்க முயன்ற 33 காளையர்கள் காயம்
 
மேலும் ஜல்லிகட்டு போட்டியில் காளைகள் வீரர்களிடம் சிக்காமல் சென்ற காட்சிகளை மக்கள் அனைவரும் ரசித்து பார்த்தனர். ஜல்லிகட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கபட்டது. பெரம்பலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள வேப்பந்தட்டை, அரும்பாவூர்,  உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அதிக அளவில் வந்ததால் அப்பகுதியில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க அரும்பாவூர் காவல்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Embed widget