மேலும் அறிய

திருச்சி: காப்பகத்தில் 10 குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு

ஸ்ரீரங்கத்தில் காப்பகத்தில் இருந்த 10 குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள் முதல் 4 வயது குழந்தைகள் வரை மொத்தம் 34 குழந்தைகள் இந்த காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் முறை தவறி பிறந்ததால் கேட்பாரற்றும், அனாதையாகவும் வீசப்பட்ட பச்சிளம் குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டு இந்த காப்பகத்தில் தான் ஒப்படைப்பார்கள்.
 
அந்த குழந்தைகள் தத்து கொடுக்கும் வரை இங்குதான் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு பால் குடித்துவிட்டு தூங்கும் போது 6 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் என 10 குழந்தைகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் 2 குழந்தைகளுக்கு மூச்சுத்திணறலும், மற்ற குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கும் இருந்தது. இந்த குழந்தைகள் அனைத்தும் 1 மாதம் முதல் 4 மாதம் வரை உள்ள குழந்தைகள். இதைத்தொடர்ந்து அவர்கள் குழந்தைகளை ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு தீவிர குழந்தைகள் சிகிச்சை பிரிவில் 2 குழந்தைகளும், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் மற்ற குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

திருச்சி: காப்பகத்தில் 10 குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு
 
மேலும் இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேருவிடம் கேட்டபோது, பருவநிலை மாற்றம் காரணமாகவும், ஒவ்வாமை காரணமாகவும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தைகள் அனைவரும் நலமாக உள்ளனர் என்றார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பந்தப்பட்ட காப்பகத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்பட்ட பவதாரணி என்ற நான்கு மாத பச்சிளம் குழந்தை, கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு ஒவ்வாமை காரணமாக, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீண்டும் 10 குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஒரே நேரத்தில் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget