மேலும் அறிய

திருச்சி மத்திய மண்டலத்தில் இந்தாண்டு 1,102 பேர் கைது, 310 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்சி மத்திய மண்ட லத்தில் மட்டும் 1,037 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் 1,102 பேர் கைது செய்யப்பட்டதுடன் 310 டன் ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல்  துறை சார்பாக பொது மக்களுக்கு பொதுவிநியோகம் மூலம் வழங்கப்படும் ரேசன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தலை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நேரடி நெல்கொள் முதல் நிலையங்களிலும், ரேஷன் அரிசி அரவை ஆலைகளிலும் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறைத் தலைவர் ஜோஷி நிரமல் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா கூறியது.. 


திருச்சி மத்திய மண்டலத்தில் இந்தாண்டு 1,102 பேர் கைது, 310 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் சரக டிஎஸ்பிக்கள் தலைமையில் இனஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வில்  அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின்  அடிப்படையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, குற்ற செயல்களில் ஈடுபட்ட 64 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பா இந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை 
 திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் மொத்தம் 1,037 வழக்குகள் பதியப்பட்டு 1,102 நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். மொத்த வழக்குகளில் கள்ளத்தனமாக பதிக்க வைத்திருந்த ரேஷன் அரிசி சுமார் 310 டன்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பதுக்கி வைத்திருந்த கெரசின் சுமார் 211 லிட்டர் மற்றும் வீட்டு உப யோக சிலிண்டர்களை வணிக நிறுவனங்களில் பயன்படுத்தியதற்காக 231 சிலிண்டர்கள பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக நான்கு சக்கர வாகனங்கள் 70, டூவீலர்கள் என 134 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


திருச்சி மத்திய மண்டலத்தில் இந்தாண்டு 1,102 பேர் கைது, 310 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

இதுவரை நடப்பு ஆண்டில் சுமார் 26 வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டபட்டவர்களின் வழக்குகள் முடிக்கப் பட்டுள்ளன. இதுவரை நடப்பு ஆண்டில் சுமார் 26 வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டபட்டவர்களின் வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதி மன்ற விசாரணைக்கு ஆஜராகாத 63 நபர்கள் மீது வாரண்ட் நிறைவேற்றப்பட்டு விசாரணை தொடங் கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒருவர் மீதும் திருவாரூர் மாவட்டத்தில் 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 57 நபர்களில் 34 நபர்களுக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்குகளில் சம்பந்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 94 இரண்டு சக்கர வாகனங்கள் 75 மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் 3 என 172 வாகனங்கள் மீது 3 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குடிமைப்பொருள் கள்ளக்கடத்தல் சம்மந்தமான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் பொருட்டு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950 தலைமையகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனை முறையாக பயன்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து கிராமங்கள் நகரங்கள் மற்றும் மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுவரொட்டிகள் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டள்ளன. மேலும் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Heavy Rain Alert: தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை எந்த மாவட்டங்களில்.? வெதர்மேன் எச்சரிக்கை
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Heavy Rain Alert: தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை எந்த மாவட்டங்களில்.? வெதர்மேன் எச்சரிக்கை
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
Embed widget