மேலும் அறிய

திருச்சி மத்திய மண்டலத்தில் இந்தாண்டு 1,102 பேர் கைது, 310 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்சி மத்திய மண்ட லத்தில் மட்டும் 1,037 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் 1,102 பேர் கைது செய்யப்பட்டதுடன் 310 டன் ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல்  துறை சார்பாக பொது மக்களுக்கு பொதுவிநியோகம் மூலம் வழங்கப்படும் ரேசன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தலை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நேரடி நெல்கொள் முதல் நிலையங்களிலும், ரேஷன் அரிசி அரவை ஆலைகளிலும் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறைத் தலைவர் ஜோஷி நிரமல் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா கூறியது.. 


திருச்சி மத்திய மண்டலத்தில் இந்தாண்டு 1,102 பேர் கைது, 310 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் சரக டிஎஸ்பிக்கள் தலைமையில் இனஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வில்  அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின்  அடிப்படையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, குற்ற செயல்களில் ஈடுபட்ட 64 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பா இந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை 
 திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் மொத்தம் 1,037 வழக்குகள் பதியப்பட்டு 1,102 நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். மொத்த வழக்குகளில் கள்ளத்தனமாக பதிக்க வைத்திருந்த ரேஷன் அரிசி சுமார் 310 டன்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பதுக்கி வைத்திருந்த கெரசின் சுமார் 211 லிட்டர் மற்றும் வீட்டு உப யோக சிலிண்டர்களை வணிக நிறுவனங்களில் பயன்படுத்தியதற்காக 231 சிலிண்டர்கள பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக நான்கு சக்கர வாகனங்கள் 70, டூவீலர்கள் என 134 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


திருச்சி மத்திய மண்டலத்தில் இந்தாண்டு 1,102 பேர் கைது, 310 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

இதுவரை நடப்பு ஆண்டில் சுமார் 26 வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டபட்டவர்களின் வழக்குகள் முடிக்கப் பட்டுள்ளன. இதுவரை நடப்பு ஆண்டில் சுமார் 26 வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டபட்டவர்களின் வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதி மன்ற விசாரணைக்கு ஆஜராகாத 63 நபர்கள் மீது வாரண்ட் நிறைவேற்றப்பட்டு விசாரணை தொடங் கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒருவர் மீதும் திருவாரூர் மாவட்டத்தில் 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 57 நபர்களில் 34 நபர்களுக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்குகளில் சம்பந்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 94 இரண்டு சக்கர வாகனங்கள் 75 மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் 3 என 172 வாகனங்கள் மீது 3 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குடிமைப்பொருள் கள்ளக்கடத்தல் சம்மந்தமான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் பொருட்டு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950 தலைமையகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனை முறையாக பயன்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து கிராமங்கள் நகரங்கள் மற்றும் மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுவரொட்டிகள் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டள்ளன. மேலும் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டை தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டை தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டை தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டை தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Embed widget