![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
நள்ளிரவில் வைக்கப்பட்ட அக்னி கலசம் அதிகாலையில் அகற்றம் - பாமகவினர் 15 பேர் கைது
நாயுடுமங்காலதில் அக்னி கலசத்தை நள்ளிரவில் நிறுவிய பாமகவிர் 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அக்னி கலசத்தை மீண்டும் அமைக்கவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
![நள்ளிரவில் வைக்கப்பட்ட அக்னி கலசம் அதிகாலையில் அகற்றம் - பாமகவினர் 15 பேர் கைது Tiruvannamalai 15 people were arrested for removing the Agni Kalasam placed at midnight early in the morning - TNN நள்ளிரவில் வைக்கப்பட்ட அக்னி கலசம் அதிகாலையில் அகற்றம் - பாமகவினர் 15 பேர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/11/b62b1c1272a5db9ec6be7bfd4a35975e1710138455429113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் கடந்த 1989-ஆம் ஆண்டு வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அன்று திறந்து வைக்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டம் (கலசம்) தற்போது சாலை விரிவாக்கத்திற்காகவும், நிழற்குடை கட்டுவதற்காகவும் அதிகாரிகள் கூறியதற்காக தற்காலிகமாக அக்னி கலசம் அகற்றப்பட்டது. அதன் பின்னர் சாலை விரிவாக்கம் மற்றும் நிழல் குடை கட்டும் பணி முடிவடைந்த நிலையில் அந்த அக்னி கலசம் நிழற்குடை பக்கத்தில் அதிகாரிகள் ஒதுக்கித் தந்த இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது. அங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த புகாரை அடுத்து அந்த அக்னி கலசத்தை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்யதனர். இதனால் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அக்னி கலசம் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
திடீரென்று இரவோடு இரவாக அந்த அக்னி கலசத்தை வருவாய் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இதை கண்டித்து பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு போலீசாரே விடுவித்தனர். அதனை தொடர்ந்து பாமகவினர் அந்த இடத்தில் கலசம் நிறுவவேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் கோரிக்கை செய்யப்படுத்தாத காரணத்தினால் அமைதியாக இருந்துவந்த பாமகவினர் இரவு 12 மணியளவில் திருவண்ணாமலை பாமக மாவட்ட செயலாளர் பக்தவத்சலம் தலைமையில் மீண்டும் நாயுடுமங்கலம் பேருந்து நிலையம் அருகே கலசத்தை நிறுவினார். அப்போது பாமகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் காவல்துறையினர் அக்னி கலசத்தை தாலுக்கா அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். நள்ளிரவில் அக்னி கலசம் வைக்கப்பட்ட விவகாரத்தில் பாமக மாவட்ட செயலாளர் உட்பட 15 நபர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் திருமணமண்டபத்தில் வைத்து இருந்தனர். இந்த சம்பவம் குறித்து பாமக தொண்டர்கள் மத்தியில் பறவியத்தனை அடுத்து நாயுடுமங்கலத்தில் ஏராளமான பாமக தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.
இதனால் பதட்டமான நிலையால் ஏற்பட்டதால் அங்கு 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் சாலைமறியல் நடத்த இருந்தது தவிர்க்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் பாமக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நாங்கள் இங்கு புதியதாக கைலாசத்தை நிறுவவில்லை ஏற்கனவே இருந்ததைத்தான் நாங்கள் நிறுவிக்கிறோம் அதற்கு எதற்கு நீங்கள் எதிர்கிர்கள் எனவும் இந்தசம்பவம் குறித்து பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் அறிக்கை விட்டுள்ளார். மீண்டும் பெரிய போராட்டங்களை நடத்துவோம், அதற்குள் நீங்கள் அக்னி கலசத்தை நிறுவ அனுமதியுங்கள், இல்லையென்றால் மிக பெரிய போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தனர். அதற்கு காவல்துறையினர் நீங்கள் எங்களுக்கு 2 நாட்கள் அவகாசம் கொடுங்கள் அதற்குள் மேல் இடத்தில் பேசுகிறோம் என தெரிவித்தார். அதன்பிறகு பாமகவினர் அங்கு இருந்து களைந்து சென்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)