மேலும் அறிய

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்

திருவண்ணாமலையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டிகளை வைக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில், தமிழ்நாடு மாநில மகளிர்
ஆணையத்தின் தலைவர் ஆ.ச.குமரி தலைமையில் இன்று அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
 மேலும் பெண்கள் பாதுகாப்பு இல்லம், முதியோர் பாதுகாப்பு இல்லம், அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், அரசு ஆதிராவிடர் மற்றும் பணிவுடன் நல விடுதிகள் நலவிடுதிகள் மற்றும் தனியார் பெண்கள் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.


தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் மாவட்ட ஒருங்கிணைந்த குழு கூட்டத்தில் பேசியதாவது :


பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்போம் திட்டத்தின் கீழ் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டிகளை வைக்க வேண்டும். இந்தப் புகார் பெட்டியில் போடப்படும் புகார் கடிதங்களை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் தான் திறக்க வேண்டும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் இடைநிற்றலை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் புரிய வைக்க வேண்டும். தேர்வில் மாணவர்கள் மதிப்பெண் குறைவதால் தற்கொலை செய்து கொள்கின்றனர். மதிப்பெண் குறைவாக எடுக்கின்ற மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

 


அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்

குறிப்பாக மலைவாழ் மாணவ,மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து அவர்களின் பெற்றோர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அவர்கள் பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் 181 கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து புகார் அளிக்கும் பெண்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் பிரச்சனைகளை பொறுமையுடன் கேட்டறிந்து காவல்துறை உதவியுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பள்ளி ஆசிரியர்களும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளின் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இளம் வயதில் கருவுறுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் இயங்கும் அனைத்து ஸ்கேன் மையங்களில் மருத்துவம் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.


அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்


 காவல்துறையில் புகார் அளிக்க வருகை தரும் பெண்களுக்கு ஆறுதலாகவும் அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்து அதனை தீர்ப்பதற்கு காவல்துறையினர் உதவி செய்ய வேண்டும். மாவட்ட சமூக நல அலுவலர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு இல்லங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் மாணவிகள் நல விடுதிகளில் துறை அலுவலர்களுடன் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவு வழங்கப்படுகிறாதா என்றும் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும். மேலும் மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கி அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும். பெண்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்தால் தான் நாடும் வளர்ச்சி அடையும் என்றும் அதற்கு அனைத்து துறைகளும் ஒத்துழைப்பு அளித்து இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி  அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

தலைப்பு செய்திகள்

ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget