இதற்காக தான் அதிமுகவில் இருந்து வெளியேறி வருகின்றனர் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
விஜயபாஸ்கர் தவறு செய்ய மாட்டார் என நினைக்கிறேன். சி.வி சண்முகம் குறித்து அவருடைய நிலைப்பாடு என்ன என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் - அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ஜெயலலிதா ஆட்சியில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்தால் தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பணையை தடை செய்தார்கள். அதனால் அதிமுகவை அழித்துவிடலாம் என்ற நோக்கில் குதிரை பேரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. ரோமங்களை போல உதிர்ந்தவர்கள் தான் பதவி சுகத்திற்காக அதிமுகவில் இருந்து வெளியேறி வருகின்றனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற கொறடாவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இன்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “தவெக மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்தால் தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பணையை தடை செய்தார்கள். அதனால் அதிமுகவை அழித்துவிடலாம் என்ற நோக்கில் குதிரை பேரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்.
விஜயபாஸ்கர் தவறு செய்ய மாட்டார் என நினைக்கிறேன். சி.வி சண்முகம் குறித்து அவருடைய நிலைப்பாடு என்ன என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். இயக்கத்துக்காக உழைப்பவர்களுக்கு கண்டிப்பாக உரிய மரியாதை தரப்படும். அதிமுகவிலிருந்து விலகியவர்கள் அனைவரும் உதிர்ந்த ரோமங்களை போன்றவர்கள் அவர்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக இதில் தலைவர்களாக பலர் வர முடியும். குதிரை பேரத்தின் மூலம் அதிமுக எம்எல்ஏக்களை தமிழக வெற்றி கழகத்தினர் விலை கொடுத்து வாங்கி வருகிறார்கள் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு மீண்டும் கட்சியில் இணைந்துள்ளனர்.
தவெக ஆட்சி பொறுப்பேற்று 15 நாட்களில் 20க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகளும்,20க்கும் மேற்பட்ட கொலைகளும் நடந்துள்ளது. மேலும் வழிபறி, கஞ்சா விற்பணை போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் சொல்வது போன்று தவெக கட்சியினர் மக்கள் சேவை செய்கின்ற அரசாக மாறவேண்டும், செயல்பட வேண்டும்” என்று அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















