மேலும் அறிய

நாகர்கோவிலில் சூறைக்காற்றால் அடியோடு பெயர்ந்து விழுந்த மின்மாற்றி - இருளில் மூழ்கிய ரயில் நிலையம்..!

பலத்த காற்றால் நாகர்கோவில் கோட்டார் கம்பளம் சந்திப்பில் இருந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையின் ஓரமாக நிறுவப்பட்டிருந்த மின்மாற்றி மீது அப்பகுதியில் நின்றிருந்த தென்னை மரம் ஒன்று சாய்ந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசுவதும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதேபோல நேற்று இரவு முதல் விடிய, விடிய நாகர்கோவில் பகுதியில் சூறைக்காற்று பலமாக வீசியது. இந்தநிலையில் நேற்று பலத்த காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாகர்கோவில் கோட்டார் கம்பளம் சந்திப்பில் இருந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையின் ஓரமாக நிறுவப்பட்டிருந்த மின்மாற்றி மீது அப்பகுதியில் நின்றிருந்த தென்னை மரம் ஒன்று சாய்ந்தது. தென்னை மரம் விழுந்த வேகத்தில் மின்மாற்றி அடியோடு பெயர்ந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. மின்மாற்றி விழுந்த வேகத்தில் அதன் அருகில் அடுத்தடுத்து நிறுவப்பட்டிருந்த 3 மின்கம்பங்களும் சாய்ந்து சேதமடைந்தன. அப்போது மின்கம்பிகள் ஒன்றோடொன்று உரசியபோது மத்தாப்பு கொளுத்தும்போது தீப்பொறி பறப்பதைப் போன்று தீப்பொறிகள் பறந்தன. மேலும் மின்மாற்றி மற்றும் மின்கம்பங்கள் வழியாகச் சென்ற மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன.
 

நாகர்கோவிலில் சூறைக்காற்றால் அடியோடு பெயர்ந்து விழுந்த மின்மாற்றி - இருளில் மூழ்கிய ரயில் நிலையம்..!
 
இதனால், அப்பகுதியும், ரயில் நிலைய பகுதியும் இருளில் மூழ்கியது. இந்த சம்பவம் நிகழ்ந்த நேரம் அதிகாலை நேரமாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் யாரும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை. உடனே இதுகுறித்து ரயில்நிலைய அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்வினியோகத்தை நிறுத்தி சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். மாற்று மின்பாதை வழியாக அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்வினியோகம் வழங்கப்பட்டது. ஆனால் ரயில் நிலையத்துக்கு தேவையான மின்சாரம் முழுக்க, முழுக்க கீழே விழுந்த மின்மாற்றியில் இருந்து தான் பெறப்பட்டு வந்தது என்பதால் ரயில் நிலையத்துக்கு மட்டும் மின்வினியோகம் வழங்க முடியவில்லை. இதனால் ரயில்வே நிர்வாகத்தினர் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரத்தை பெற்று மின்தேவையை பூர்த்தி செய்து கொண்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு சாலையில் கிடந்த மின் கம்பிகள் மற்றும் மின்மாற்றி மற்றும் மின்கம்பங்கள் ஆகியவற்றை மின்வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
 

நாகர்கோவிலில் சூறைக்காற்றால் அடியோடு பெயர்ந்து விழுந்த மின்மாற்றி - இருளில் மூழ்கிய ரயில் நிலையம்..!
 
சாலையின் ஒரு பகுதியில் பேரிகார்டுகளால் தடுப்புகள் அமைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டும், மற்றொரு பகுதியில் வாகன போக்குவரத்து நடைபெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு காலை நேர ரயிலுக்காக வந்து சென்ற பயணிகள் சிரமமின்றி கடந்து சென்றனர். மேலும் மற்ற வாகனங்களும், அரசு பஸ்களும் இந்த சாலையின் ஒரு பகுதி வழியாக கடந்து சென்றதை காண முடிந்தது. பின்னர் மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் தொடர்ந்து மின்மாற்றியையும், 3 மின்கம்பங்களையும் நடும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் விழுந்த மின்மாற்றியில் சேதம் எதுவும் ஏற்படாததால் அதே மின்மாற்றியை அங்கு நிறுவினர்.

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Embed widget