மேலும் அறிய

பல் பிடுங்கிய விவகாரம்: ஐஜி அல்லது டிஐஜி அந்தஸ்தில் இந்த வழக்கை கண்காணிக்க உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் - பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்

நீதித்துறை மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பும் ஐபிஎஸ் அதிகாரிக்கு இந்த விவகாரத்தில் ஆதரவாக செயல்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுந்த புகாரில் சிபிசிஐடி போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  பாதிக்கப்பட்ட நபரான அம்பாசமுத்திரம் அடையகருங்குளத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரின் தரப்பினர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து அருண்குமாரின் சகோதரரான 17 வயது சிறார், அவரது தாயார் ராஜேஸ்வரி, தந்தை கண்ணன் ஆகியோர் தங்களது தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன் என்பவருடன்  சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்களது கருத்துக்களை அறிக்கையாக கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்டு நடைபெற்ற விசாரணைக்கு ஆஜராகாமல் எழுந்து வெளியேறினர்.

இதனைத்தொடர்ந்து அருண்குமார் தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "குற்றம் செய்யப்பட்டவர் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் வழக்கு பதிவு செய்துள்ள நிலையிலும் இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கிறார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உயிருக்கு அச்சுறுத்தலோடு இருந்து வருகிறார்கள். பெங்களூரில் வேலை பார்க்கும் பாதிக்கப்பட்ட நபருக்கு 5-ம் தேதி ஆஜராக 3-ந்தேதி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் நிலையில் அவருடைய நிலையிலிருந்து மேல் அதிகாரியாக இருக்கும் ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி.யை விசாரணையை மேற்பார்வை செய்யும் அதிகாரியாக நியமிக்க வேண்டும்.

டி.எஸ்.பி தலைமையில் விசாரணை என்பது சரியானதாக இருக்காது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் தான் உண்மை நிலை வெளிவரும். சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னர் தான் பலர் சாட்சியம் அளித்தனர். உண்மை சம்பவங்கள் வெளியே வந்தது. ஐபிஎஸ் அத்தாரி மீது கைது நடவடிக்கை இருந்தால் தான் துணிச்சலுடன் வெளிவந்து தங்களது தரப்பு வாதங்களை  பாதிக்கப்பட்ட தரப்பினர் சாட்சியம் அளிப்பார்கள். இந்த விசாரணையை மேற்பார்வை செய்ய உயர் அதிகாரியை கண்டிப்பாக நியமனம் செய்ய வேண்டும்.

நீதித்துறை மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பும் ஐபிஎஸ் அதிகாரிக்கு இந்த விவகாரத்தில் ஆதரவாக செயல்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவ பரிசோதனை குறிப்பை கேட்டு அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் கேட்டால் தர மறுக்கிறார்கள். அனைத்து துறையும் சேர்ந்து கூட்டாக சேர்ந்து ஐபிஎஸ் அதிகாரியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்ற அச்சம் எழுகிறது.இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆய்வாளர்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். இதுவரை மூன்று வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் மேலும் இந்த விவகாரத்தில் பல புகார்கள் பல வழக்குகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெறுவது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நம்பிக்கை இல்லை என கருதுகிறார்கள். பாதிக்கப்பட்ட தரப்பை சார்ந்த ஒருவருக்கு மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று ஆஜராகிய நபர்கள் சாட்சியம் அளிக்கவில்லை என தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Fact Check: மெட்ரோ ரயில் விளம்பரம் -  மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
மெட்ரோ ரயில் விளம்பரம் - மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Embed widget