மேலும் அறிய

தொடரும் மாணவர்கள் மோதல்..! கடந்த ஒரு மாதத்திற்குள் 3வது சம்பவம்..! 7 பேரில் 6 பேர் சீர்திருத்தப்பள்ளியில் அடைப்பு! காரணம் என்ன?

மாணவர் பேரவை தலைவரை தேர்ந்தெடுப்பதில் மோதல் ஏற்பட்டு ஆதி திராவிட மாணவர் மீது  மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பெற்றோர்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் மாணவர்களுக்கிடையே தொடர்ச்சியாக மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக  நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே புதூரில் இயங்கி வருகிறது கிங்ஸ் மெட்ரிக் பள்ளி. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வரும் நிலையில் நேற்று முன் தினம் பள்ளியில் மாணவர் பேரவை தலைவர் தேர்தல் நடந்ததாக தெரிகிறது. இதில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆதிதிராவிட மாணவர் ஒருவர் மீது மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் தாக்குதல்  நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் காயமடைந்த மாணவன் மற்றும்  தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான மாணவன் இராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது தொடர்பாக தகவலறிந்த வள்ளியூர் காவல்துறையினர் பிரச்சினையில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் அதன்படி பிரச்சினையில் ஈடுபட்ட 7 மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 7 மாணவர்களில் 6 மாணவர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.  ஏழு பேரில் 1 மாணவன் தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளரின் மகன் என்பதால் அந்த மாணவன் மீது மட்டும் நடவடிக்கை இல்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் இடையேயான மோதல் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது தனியார் பள்ளியிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஓராண்டில் வள்ளியூரில் மட்டும் மூன்றாவது சம்பவமாக பள்ளியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதே போல கடந்த ஜூலை தொடங்கி தற்போது வரை 3 வது சம்பவமாக மாணவர்களுக்கிடையே மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நெல்லை மாவட்டம் நாகர்கோவில் செல்லும் சாலையில் பொன்னாக்குடி அடுத்துள்ளது மருதகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும்  அரசு உயர்நிலைப்பள்ளி படிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பு மாணவர்களை மற்றொரு தரப்பு மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அதே போல கடந்த 2 ஆம் தேதி நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் உட்கோட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்திய கடற்படை வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி ஒன்பதாவது வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை சக மாணவர் மீது சிந்திய நிலையில் வகுப்பில் சிறு தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த மாணவரை மற்றொரு மாணவர் அரிவாளை கொண்டு சென்று தாக்கினார். இந்த நிலையில் தற்போதைய சம்பவமாக மாணவர் பேரவை தலைவரை தேர்ந்தெடுப்பதில் மோதல் ஏற்பட்டு ஆதி திராவிட மாணவர் மீது  மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் சாதி ரீதியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பெற்றோர்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin ON PM: ”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்
MK Stalin ON PM: ”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்
CBSE Board Exams: 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? தேதிகளை அறிவித்த சிபிஎஸ்இ - முழு அட்டவணை இதோ
CBSE Board Exams: 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? தேதிகளை அறிவித்த சிபிஎஸ்இ - முழு அட்டவணை இதோ
IND Vs SA WC Final: கைக்கு எட்டும் தூரத்தில் கோப்பை.. கோட்டை விட்ட ரோகித், ஹர்மன் சாதிப்பாரா? தெ.ஆப்., உடன் ஃபைனல்..
IND Vs SA WC Final: கைக்கு எட்டும் தூரத்தில் கோப்பை.. கோட்டை விட்ட ரோகித், ஹர்மன் சாதிப்பாரா? தெ.ஆப்., உடன் ஃபைனல்..
Jemimah Rodrigues: ஆஸி., வீழ்த்தி.. சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய இந்திய அணி - ஜெமிமா வெறித்தனம்
Jemimah Rodrigues: ஆஸி., வீழ்த்தி.. சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய இந்திய அணி - ஜெமிமா வெறித்தனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Sengottaiyan | ஒரே காரில் OPS உடன் பயணம்! செங்கோட்டையன் ப்ளான் என்ன? ENTRY கொடுத்த TTV
EPS on Sengottaiyan | செங்கோட்டையன் நீக்கம்?’’துரோகிகளுக்கு இடமில்லை’’EPS-ன் அதிரடி மூவ்!
சட்டை இல்லாமல் ATROCITY தட்டிக்கேட்ட கனி தகாத முறையில் பேசிய திவாகர் | Big Boss 9 issue
2 லட்சம் செலவில் Bench!மாணவர்களுக்கு farewell பரிசு-அசத்திய அரசு பள்ளி ஆசிரியை | Villupuram News
‘ADVANCED STROKE NETWORK’ பக்கவாத நோய் பயமா?அப்போலோவின் புதிய முயற்சி | Apollo Advanced Stroke Network

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin ON PM: ”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்
MK Stalin ON PM: ”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்
CBSE Board Exams: 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? தேதிகளை அறிவித்த சிபிஎஸ்இ - முழு அட்டவணை இதோ
CBSE Board Exams: 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? தேதிகளை அறிவித்த சிபிஎஸ்இ - முழு அட்டவணை இதோ
IND Vs SA WC Final: கைக்கு எட்டும் தூரத்தில் கோப்பை.. கோட்டை விட்ட ரோகித், ஹர்மன் சாதிப்பாரா? தெ.ஆப்., உடன் ஃபைனல்..
IND Vs SA WC Final: கைக்கு எட்டும் தூரத்தில் கோப்பை.. கோட்டை விட்ட ரோகித், ஹர்மன் சாதிப்பாரா? தெ.ஆப்., உடன் ஃபைனல்..
Jemimah Rodrigues: ஆஸி., வீழ்த்தி.. சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய இந்திய அணி - ஜெமிமா வெறித்தனம்
Jemimah Rodrigues: ஆஸி., வீழ்த்தி.. சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய இந்திய அணி - ஜெமிமா வெறித்தனம்
Ind W vs Aus W: ஜெயித்து காட்டிய ஜெமிமா.. நாக் - அவுட் ஆன உலக சாம்பியன் ஆஸி., ஃபைனலில் இந்தியா
Ind W vs Aus W: ஜெயித்து காட்டிய ஜெமிமா.. நாக் - அவுட் ஆன உலக சாம்பியன் ஆஸி., ஃபைனலில் இந்தியா
Jemimah Rodrigues : கண்ணீர் விட்டு அழுகை.. 10 ஆண்டு காத்திருப்பு... தோனி செய்யாததை செய்துக்காட்டிய ஜெமிமா..
Jemimah Rodrigues : கண்ணீர் விட்டு அழுகை.. 10 ஆண்டு காத்திருப்பு... தோனி செய்யாததை செய்துக்காட்டிய ஜெமிமா..
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Supreme court CJI: வழக்கறிஞர்களின் Favourite.. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி..  யார் இந்த சூர்யா காந்த்?
Supreme court CJI: வழக்கறிஞர்களின் Favourite.. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி.. யார் இந்த சூர்யா காந்த்?
Embed widget